Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
எனக்காகவே நீ… - cover

எனக்காகவே நீ…

ரமணிசந்திரன்

Casa editrice: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinossi

பூரண நிலவின் தண்ணொளியில், சிலுசிலுத்த தென்றல் காற்றினால், பரந்து விரிந்த கடல்பரப்பில் எழுந்த எண்ணிலடங்காத சின்னஞ்சிறு அலைகள் வெள்ளிப்பாளங்களாக மின்னுவதைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது திவ்யாவுக்கு.“ஆகா! என்ன அழகு!” என்று ரசனையோடு அவள் ‘இயம்ப, “ஆமாமாம்!” என்று அதை அப்படியே ஆமோதித்தான் அவள் அருகே அமர்ந்திருந்த மனோரஞ்சன்.“தனக்குத்தான் - சந்திரன் என்று வானம் பெருமைப்பட்டுக் கொண்டு இருந்திருக்கும், இல்லையா? ஆனால் கடலில் இத்தனை லட்சம்... கோடிக் கணக்காய் வெண்ணிலவுகள் மிதப்பதைப் பார்க்கும் போது... ரஞ்சன், இதைப் பார்க்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இல்லையா?” என்று கேட்டாள் அவள்.“ஆமாமாம்” நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான் என்று அவளது பக்கவாட்டுத் தோற்றத்தில் ஓரக்கண் பார்வையைப் பதித்து ஒத்துப் பாடினான் அவன்.“இயற்கையாகப் பார்த்து, மனம் உவந்து அளிக்கும் இந்த அழகை ரசித்து அனுபவியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறவர்களை நினைத்தால் கோபம்தான் வருகிறது...”அவள் பேசுகையிலேயே, “அப்படி ரசிக்கவென்று எந்தக் கழுதையாவது வந்து நின்றால் உதைதான் கிடைக்கும்” என்று அவன் முணுமுணுத்தான்.“என்ன சொன்னீர்கள்? சரியாகக் கேட்கவில்...” என்று திரும்பிய திவ்யா, மனோரஞ்சனின் பார்வை கடலை விடுத்து அவளிடம் பதிந்திருப்பதைக் கண்டதும் கலீரென்று நகைத்து விட்டு “உதைவிழும்.” என்று சுட்டுவிரலால் ‘பத்திரம்’ காட்டினாள்“முதலில் உனக்கு உதை விழாமல் பார்த்துக் கொள். மணி என்ன தெரியுமா? பதினொன்று. இப்போதே கிளம்பினால் கூட உன் வீடு போய்ச்சேர மணி பதினொன்றரை ஆகிவிடும். இவ்... வளவு நேரம் எங்கே சுற்றினாய் என்று உன் பெரியப்பா பெல்ட்டால்... உன்னை விளாசப் போகிறார்.”“மாட்டவே மாட்டார். என் பெரியப்பா எவ்வளவு நல்லவர் தெரியுமா?” என்றாள் திவ்யா பெருமையாக.“அல்லது உன் பெரியம்மா. அவர்கள் கரண்டிக் காம்பைக் காய வைத்து சூடு இழுக்கப் போகிறார்கள், பார்.” என்று மிரட்டினான் மனோரஞ்சன்.“சீச்சீ.” என்றாள் திவ்யா. “விளையாட்டுக்குக்கூட என் பெரியப்பா, பெரியம்மா பற்றி இப்படி சொல்லாதீர்கள் ரஞ்சன். அவர்கள் இரண்டு பேருக்குமே நான் என்றால் உயிர். பிரியம் மட்டுமில்லாமல் என்னிடம் முழு நம்பிக்கையும் உண்டு. திவ்யா மனமறிந்து தப்பு செய்யமாட்டாள் என்பார்கள். பிரபாகூட எப்போதும் குறைப்படுவாள். “அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் உன்னிடம்தான் உயிர். என்னைக் கண்டாலே கரித்துக் கொட்டுகிறார்களே, மெய்யாகவே என்னைப் பெற்றார்களா அல்லது குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வளர்க்கிறார்களா?” என்று பொருமுவாள். இதைப் பெரியப்பா, பெரியம்மாவிடமே கேட்டுவிட்டு அதற்கு வேறு வாங்கிக்கட்டிக் கொள்ளுவாள்... எனக்குக் கூடச் சில சமயங்களில் ஒருமாதிரி இருக்கும். என்னைக் ‘கண்ணா’ என்று கொஞ்சுகிறவர்கள், அவளை இந்தக் கழுதை எங்கே போயிற்று?” என்று கேட்பார்களா...“போதும் போதும்” என்று கெஞ்சாக் குறையாக திவ்யாவின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சை இடைமறித்தான் மனோரஞ்சன். “உன் பெரியப்பாவும் பெரியம்மாவும் மிகவும் நல்லவர்கள்தான், திவ்யா. ஆனால் அதற்காக அவர்களது புராணத்தை நான் எத்தனை தடவை கேட்டுக் கொண்டிருக்க முடியும் சொல்லு? சொல்ல உனக்கு அலுக்காமல் இருக்கலாம். ஆனால் கேட்கிற எனக்குக் கொஞ்சம் போ... ரடித்துப் போய்விட்டதே...” என்று வேடிக்கை போலப் பேசியவன், அவள் அதை விளையாட்டாக எண்ணவில்லை என்பதை உணர்ந்து பேச்சை மாற்றினான்
Disponibile da: 03/04/2025.
Lunghezza di stampa: 324 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Edhiroliyaal - cover

    Edhiroliyaal

    Va Ve Su Iyer

    • 0
    • 0
    • 0
    தமிழின் முதல் சிறுகதையாக கருதப்படுகிறது. சிறுகதை என்ற வடிவம் இந்தக் கதையோடுதான் தொடங்குவதாக கருதப்படுகிறது. எளிமையான, மிகை உணர்ச்சிக் கதை என்றாலும் இன்றும் படிக்கக் கூடிய கதைதான்.
    Mostra libro
  • வெள்ளியங்காட்டான் கவிதைகள் சமுதாயம் - cover

    வெள்ளியங்காட்டான் கவிதைகள் சமுதாயம்

    Velliyankattan

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    உணர்ச்சி வசப்படுபவன் கவிஞன். சத்தியத்திலும் சமத்துவத்திலும் பற்றுடையவன். சராசரி மனிதன் விலகிப் போக ஒதுக்க, கவிஞன் ஒதுங்கிப் போகிறான். உண்மையை உயிராகக் கொண்டவன் கவிஞன். அறமறிந்து ஒழுகுபவன். பிறாரால் ஆளமுடியாதவன். தன்னைத் தான் ஆள்கிறவன். தலைவனை அறிந்து அடைந்தவன். மக்கள் மொழியில் விபத்தானதை சம்பத்து எனக் கொள்பவன். கவிஞனை இப்படி இனம் காண்கிறார் வெள்ளியங்காட்டான். அவருடைய கவிதைகளை ஐந்து ஒலி நூல்களாக பேராசிரியர் ரமணி அளிக்கிறார். இந்த முதல் ஒலிநூலில் சமுதாயம் என்ற துணைத் தலைப்பில் அவருடைய 35 கவிதைகள். 
     
    Mostra libro
  • Sirupanjamoolam Innilai Muthumozhikkanji - cover

    Sirupanjamoolam Innilai...

    Post Sangam Poets

    • 0
    • 0
    • 0
    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் ஆவார். 
    இன்னிலை என்னும் பெயரில் பழம்பாடல்கள் சிலவற்றின் தொகுப்பாக ஒரு நூல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்துக்காட்டும் பாடலில் ‘இன்னிலைய காஞ்சி’ என்னும் தொடர் வருகிறது. கைந்நிலை என்னும் நூல் காணப்படாத காலத்தில் 18 என்னும் எண்ணிக்கையைச் சமன்செய்ய இந்த நூல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 
    மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழிஎன்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. நிலையாமையை உணர்த்தும் உலகியல் அனுபவம் உணர்த்துதலால் இப்பெயர் பெற்றது. காஞ்சி என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியம் காட்டும் ஒரு துறை. அது “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முறைமை” என்னும் துறை என்று விளக்கப்பட்டுள்ளது.  இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டது இந்த நூல். அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் தரவு அடியோட
    Mostra libro
  • என் வாழ்வு - cover

    என் வாழ்வு

    சி.என்.அண்ணாதுரை

    • 0
    • 0
    • 0
    அண்ணாதுரை சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர். அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல்படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர். இந்த ஊடகங்களில் பிற திராவிட இயக்கப் படைப்பாளிகளும் அணி அணியாக நுழைந்து தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர். காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர். தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்கப்படாதது. எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டியவர் அண்ணா. தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக உணரத் தொடங்கிய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அசைக்கமுடியாத ஓர் அங்கீகாரமாகிவிட்டது இந்தப் பெயர். அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடாகிவிட்டது. அது ஒரு வரலாறாக, அடையாளமாக கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் கட்சி, பல்கலைக்கழகம், விமான நிலையம், சாலை, நூலகம் என்று ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் கூட நவீன தமிழ்நாட்டின் மொழி, அரசியல், பண்பாடு ஆகியவற்றின் மீது அவர் செலுத்திய தாக்கத்தின் பரிமாணத்தோடு ஒப்பிடும்போது இந்த அங்கீகாரம் குறைவே.  
    https://www.bbc.com/tamil/india-56360655 
    "என் வாழ்வு" அண்ணாவின் முதல் நாவல். 1940ல் திராவிட நாடு இதழில் வெளிவந்தது. சீரழிக்கப்பட்ட ஒரு தாசியின
    Mostra libro
  • கிராஜ நாராயணன் சிறுகதைகள் Volume 9 - cover

    கிராஜ நாராயணன் சிறுகதைகள் Volume 9

    கி. ரா

    • 0
    • 0
    • 0
    கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 
    1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 
    கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. 
    ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார். 
    இந்த ஒலி நூலில் ராஜநாராயணன் எழுதிய 
    வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும் 
    பொம்மைகளும் கிளர்ந்தெழும் 
    இல்லாள் 
    காய்ச்ச மரம் 
    சாவு 
    சொல் விளையாட்டு 
    தமிள் படிச்ச அளகு 
    பாலம் 
    புன்சிரிப்பு 
    என்ற 9 கதைகள் இடம் பெறுகின்றன‌
    Mostra libro
  • Aimperung Kappiyam Full Stories - ஐம்பெருங் காப்பியம் - Tamil Audio Book - cover

    Aimperung Kappiyam Full Stories...

    Ilango Adikal, Seethalai...

    • 0
    • 0
    • 0
    ஐம்பெரும் காப்பியங்கள் என்பது தமிழ் இலக்கியத்தின் பொற்காலத்தை பிரதிபலிக்கும் ஐந்து சிறந்த மகாகாப்பியங்கள் — சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. ஒவ்வொன்றும் தமிழ் பண்பாடு, சமயம், நெறி, தத்துவம், வரலாறு ஆகியவற்றை ஆழமாக வெளிப்படுத்துகின்றன. தமிழ் பாரம்பரியம், காப்பிய வரலாறு, சங்க கால இலக்கியத்தை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இக்காப்பியங்கள் ஒரு அரிய பொக்கிஷம்.
    Mostra libro