Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
சிந்திய ரத்தம் இந்திய ரத்தம் - cover

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

டெல்லி.பிரதமரின் இல்லம், உதவியாளர், கனோஜ் நேஷனல் செக்யூரிடி ஃபோர்ஸ் அதிகாரி ஃப்ரெட்ரிக்கிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.“இன்னர்லிங் செக்யூரிடி ஃபோர்ஸில் இருக்கிற ஆறு பேரை இன்றைக்கு. ராத்திரி மாற்ற வேண்டும்இல்லையா...?”“ஆமாம்...”“ட்யூட்டியை யார் யார்க்கு மாற்றுகிறீர்கள்...?”“தன் சர்ட் பாக்கெட்டில் இருந்த - காலிகோ பைண்ட் செய்யப்பட்ட சிறிய டயரியை எடுத்து - பெயர்களைப்படித்தார் ஃப்ரெட்ரிக்.“சில்வா, மஜீம்தார், அரவிந்த், மித்ரா ராவ், ரொமேஷ், - சித்திக்...”“மிஸ்டர் ஃப்ரெட்ரிக்! தற்போதைய அரசியல் நிலைமையம், நாட்டின் நிலைமையும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்... பிரதமர்க்கும் அவருடைய குடும்பத்துக்கும் உச்சபட்ச பாதுகாப்பு தேவைப்படுகிறது. இன்னும் ஒரு மூன்று மாத காலத்திற்கு... இந்த அதிதீவிரமான பாதுகாப்பு பிரதமர்க்கும் அவருடைய குடும்பத்துக்கும் உச்சபட்ச பாதுகாப்பு தேவைப்படுகிறது. இன்னம் ஒரு முன்று மாதகாலத்திற்கு... இந்த அதிதீவிரமான பாதுகாப்பு பிரதமர்க்கு தேவைப்படும்... இந்த காலகட்டத்தில்... அறிமுகம் இல்லாத அந்நிய ஆட்கள் யார்க்கும்…... பிரதமரின் இல்லத்திற்குள் நுழைய அனுமதி யில்லை... விசேஷ க்ரீன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே பிரதமரை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்... க்ரீன் கார்டுகள்மொத்தம் ஐந்து பேர்க்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன... அவர்கள் - யார் யார் என்பதை அடுத்த இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு தெரியப்படுத்துவேன்.”ஃப்ரெட்ரிக் தலையாட்டினார்.உதவியாளர் கனோஜ் தொடர்ந்தார். இன்னர் லிங்க் செக்யூரிடியில் அடுத்த ஒருவார காலம் பணிபுரியப்போகும் அந்த ஆறுபேர்களையும் நான் இப்பொழுது பார்த்து பேச வேண்டும். முடியுமா...?”““முடியும். செக்யூரிடி க்வார்ட்ர்ஸில் தற்போது... ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் வரவழைக்கட்டுமா?”“வரவழையுங்கள்...!“ஃப்ரெட்ரிக் அருகே இருந்த செக்யூரிடி ஸெல்லுக்குள் நுழைந்து க்வார்ட்டர்ஸை தொடர்பு கொண்டு விபரம் சொல்லிவிட்டு - வெளியே வந்தார்.அடுத்த பத்தாவது நிமிடம்சில்வா, மஜும்தார், அரவிந்த், மித்ரா ராவ், ரொமேஷ், சித்திக் - ஆறு பேரும் பாட்டில் பச்சை யூனிஃபார்ம்களில்பூட்ஸ் சத்தங்களோடு வந்து நட்டு வைத்த - கத்திகள் மாதிரி நின்றார்கள்பிரதமரின் உதவியாளர் கனோஜ் அவர்களை ஏறிட்டார். “இன்னர்லிங்க் செக்யூரிடி கார்டஸாக நீங்கள் ஆறுபேரும் பிரதமரின் குடும்பத்தை பாதுகாக்கப் போகிறீர்கள். ரிக்கார்ட்ஸ்படி உங்களுடைய ஆறுபேரின் திறமைகள் எனக்குத் தெரியும். ஒரு நெருப்பு வளையம் போல் இருந்து - நீங்கள் செயல்படவேண்டும்.“எஸ்... ஸார்...”“நாட்டில் தற்போது இனக்கலவரங்கள் அதிகம். பழைய கோயில் களை புதுக் கண்ணோட்டத்தோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மதத் தலைவர்கள் இதனால் சில அரசியல் தலைவர்களின் மேல்... ஜனங்களுக்கு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களிடையே சிலர் தீவிரவாதிகளாக மாறி - ஆங்காங்கே இனக்கொலைகளைசெய்து வருகிறார்கள். அவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை... நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...”கனோஜ் சொல்லி முடித்ததும் - ஆறு பேரும் அட்டென்ஷனுக்கு வந்து - இடுப்பிலிருந்த வளைவான கத்திகளை உருவிக் கொண்டு மண்டியிட்டார்கள். “இந்த தேசம் எங்களுக்கு பெரிது. இந்த நாட்டில் தலைவர் எங்களுக்கு முக்கியமானவர். அவரையும் அவருடைய குடும்பத்தையும் - எங்கள் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை காப்போம், இந்த தேசத்திற்காக எங்களை அர்ப்பணிப்போம்...”“ஸெக்யூரிடி ஸெல்லுக்குள் டெலிபோன் கிணுகிணுத்தது
Available since: 02/08/2024.
Print length: 68 pages.

Other books that might interest you

  • Thappu Thappaai oru Thappu - cover

    Thappu Thappaai oru Thappu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "தப்பு என்பதே ஒரு தப்பான விஷயம். அந்தத் தப்பையே தப்புத் தப்பாய் பண்ணினால் எப்படியிருக்கும் ? குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், நீதி தேவதை ஏதாவது ஒரு வடிவில் வந்து அவர்களைத் தண்டிப்பது காலத்தின் கட்டாயமாக மாறுகிறது. இது ஒரு சோஷியோ க்ரைம் த்ரில்லர்.
    
    நாவலின் நாயகி காயத்ரியும், நாயகன் சத்யநாராயணனும் எதிர்பாராதவிதமாய் தெருவில் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் கல்லூரியில் படித்தவர்கள். காயத்ரியிடம் சத்யநாராயணன் இப்போது நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்க, அவள் தன்னிடம் உள்ள பையைத் திறந்து காட்டி, "ஊதுவத்தி வியாபாரம்தான் என்னுடைய பிசினஸ். வீடுவீடாய் போய் விற்று வருகிறேன்" என்று சொல்ல சத்யநாராயணன் அதிர்ந்து போய் அவளிடம், " காயத்ரி ! இதை உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்கலை. பள்ளியிலும், கல்லூரியிலும் நீ ஒரு கெட்டிக்கார மாணவியாய் இருந்தாய். நீ ஒரு நல்ல வேலையில் இருந்து உனக்குத் திருமணமும் நடந்து இருக்கும் என்று நினைத்தேன். உன் வாழ்க்கையில் என்னதான் நடந்தது என்று கேட்க காயத்ரி ஒரு விரக்தி சிரிப்போடு, " விதி சிரிக்கும்போது நாம் அழ வேண்டியிருக்கிறதே " என்று சொல்கிறாள். அவள் சொன்ன இந்த வரியில் இருந்துதான் " தப்புத் தப்பாய் ஒரு தப்பு " நாவல் சூடு பிடிக்கிறது.
    
    காயத்ரியின் தற்போதைய நிலைமைக்கு எது காரணம் யார் காரணம் என்பது ப்ளாஷ்பேக்கில் தெரிய வரும்போது வாசகர்கள் ஒரு அதிர்ச்சிக்கு உட்பட்டு உறைந்து போவது மட்டும் நிச்சயம். காரணம் palm membrane. அது என்ன "palm membrane" என்று கேட்கிறீர்களா ஆடியோவில் நாவலைக் கேளுங்கள்."
    Show book
  • Mohini Koyil - cover

    Mohini Koyil

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    மாந்திரீக நாவல்களின் வரிசையில் கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றுமொரு படைப்பு மோகினி கோயில். மும்பை நகரத்திலிருந்து வெளிவரும் மலையாள மாத இதழான "சேல்ஸ் டாக்ஸ்" பத்திரிகையில் 27 மாதங்கள் "யக்ஷிக்காவு" என்ற பெயரில் வெளிவந்த நாவல்.
    
    பேய், பிசாசு, மோகினி என்றால் அனைவரும் பயப்படுவதுண்டு. இக்கதையில் சற்று நேர்மாறாக மோகினியான தேவசேனையின் உதவியுடன் கோவிந்தன் குட்டி என்னும் இளைஞன் எவ்வாறு நன்மை பெறுகிறான் என்பது பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் கூறப்பட்டுள்ளது. மாந்திரீக சக்தி தெய்வீக சக்திக்கு முன்னால் செயலற்று போகும் என்பதை பல திகிலூட்டும் சம்பவங்களுடன் விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது இக்கதை.
    Show book
  • 5 Star Dhrogam - cover

    5 Star Dhrogam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இளம் வருமான வரி அதிகாரிகளான சாதூரியா மற்றும் நித்திலன் "ஆபரேஷன் ஆக்டோபஸ்" என்னும் விசாரணையில் தவறான வழியில் ஒரு அரசியல் புள்ளி ஈட்டிய வருமானத்தை வெளியில் கொண்டுவர ஈடுபடுகிறார்கள். நான்கு பக்கங்களிலிருந்தும் இந்த பணத்தை அடைய பலர் துடிக்கிறார்கள். இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடும் சிபிஐ மற்றும் வருமான வரி அதிகாரிகள் இடையில் நிகழும் பற்பல மர்மமான தொடர் கொலைகளினால் குழப்புகிறார்கள் . பல எதிர்பாராத திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்த கதை "பைவ் ஸ்டார் துரோகம்".
    Show book
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Show book
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Show book
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Show book