Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
சொர்க்க வாசல்! - cover

சொர்க்க வாசல்!

ரமணிசந்திரன்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

அண்ணன் நடராஜ் நின்றிருந்த தோரணையும் “யார்றி அவன்” என்று குரலை ஒருமாதிரி இழுத்துக் கேட்ட விதமும் சௌந்தர்யாவின் வயிற்றில் ஓர் அவஸ்தையான ரசாயன கலவையை ஏற்படுத்த கையில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரம் தானாய் நழுவியது.“டிங்...டிணார்”“அ... அண்ணா...” சௌந்தர்யாவின் பெரிய விழிகள் நட்ராஜ் முகத்திலேயே திகைத்து நின்றது. நெற்றியிலும் மேலுதட்டிலும் அவசர அவசரமாய் அரும்பிவிட்ட வியர்வைச்சுரங்கள் வழிய நேரம் பார்த்தன.“அவன் யார்னு கேட்டேன்”“வ... வந்து... வந்து...”பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்த சிவசாமி சௌந்தர்யாவின் நிலைமையைப் பார்த்ததும் முகம் மாறினார்.“டேய் என்னடா நடந்தது?”அப்பாவைப் பொருட்படுத்தவில்லை. நடராஜ் வாயில் இருந்த டூத் பேஸ்ட் நுரையை சமையலறை ஜன்னல் வெளியே தோட்டத்து செடிகள் மீது உமிழ்ந்துவிட்டு சௌந்தர்யாவின் பக்கம் கண்கள் சிவக்க திரும்பினான்.“யாரவன்?”எச்சில் விழுங்கினாள்.“காதலிக்கிறியா?”“ஆ... ஆமா...” சொல்லி முடிப்பதற்குள் உடம்பு பூராவும் சில்லிட்டுப் போன மாதிரியான உணர்வு.“எத்தனை நாளா?“மூ... மூணு மாசமா”“அவன் பேர் என்ன?”“வ... வருண்”“என்ன ஜாதி”“ந... நம்ம ஜாதிதான்”‘என்ன அண்ணன் இவ்வளவு நிதானமாய் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று சௌந்தர்யா நினைத்த வினாடி -நடராஜ் கத்தினான். “ரோகிணி என் பெல்ட்டைக் கொஞ்சம் எடுத்துட்டு வா”அந்தக் கத்தலுக்காகவே காத்திருந்த ரோகிணி சமையலறைக்குள் நுழைந்தாள். கையில் பாம்பு சட்டை உரித்த மாதிரியான பெல்ட்.சிவசாமி பதறிப்போய் நடராஜின் தோளைப் பற்றினார். “டேய்...”“அப்பா இவளை காலேஜுக்கு அனுப்பக்கூடாதுன்னு நான் முடிவு பண்ணினப்ப நீங்க என்ன சொன்னீங்க? சௌந்தர்யா படிக்க ரொம்ப ஆசைப்படறா, படிக்க வையேன்டான்னு சொன்னீங்க. உங்க பேச்சைக் கேட்டு காலேஜுக்கு அனுப்பினேன். இப்ப இவ என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கா தெரியுமாப்பா? இவபடிக்க ஆசைப்படலை. காதலிக்க ஆசைப்பட்டிருக்கா. ஆம்பிளை சுகத்துக்காக...”“டேய் நிறுத்துடா... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு போகாதே. இந்த வயசுல இதெல்லாம் சகஜம். அந்தப் பையன் யாரு. என்னன்னு விசாரிப்போம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த குடும்பமாய் இருந்தா...”“சம்பந்தம் பேசலாம்னு சொல்றீங்களா?”“ஆமா! சௌந்தர்யா சொல்லிட்டா. பையன் ஜாதி பிரச்சினை ஓவர். வேற ஏதாவது பிரச்சனைகள் இருக்கான்னு பார்த்துட்டு...”ரோகிணி குறுக்கிட்டாள்.
Disponibile da: 16/01/2024.
Lunghezza di stampa: 90 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Mostra libro
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Mostra libro
  • Adipatta Puli - cover

    Adipatta Puli

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    Coimbatore city is rocked by two terrorist bomb blasts. The mastermind behind them is Karuppasamy who has escaped police custody and joined a terrorist group as a 'consultant'. He sends letters to the Police commissioner's office in advance through courier, giving hints about the upcoming blasts. He demands the release of the arrested terrorist leader Shahul Iqbal. Two more blasts were in the offing. Did the police succumb? Did they trace the location of Karuppusamy? What is the role of the young college-going son of a Police officer who lies in bed recovering from gun-shots, in the complex process of investigations? Did the police thwart the subsequent bomb blasts?
    
    கோயம்புத்தூர் நகரம் அடுத்தடுத்த இரண்டு தீவிரவாத வெடிகுண்டுகளால் அதிர்கிறது. தீவிரவாதிகளுக்குப் பின்னால் மூளையாக இருந்து செயல்படுபவன் கருப்பசாமி. போலீஸ் காவலில் இருந்து தப்பித்த அவன், வெடி குண்டு வைப்பதற்கு அந்த பயங்கரவாதக் குழுவுக்கு 'ஆலோசகராக' இருக்கிறான். போலீசை சீண்டும் விதத்தில் , வரவிருக்கும் குண்டுவெடிப்பு பற்றிய குறிப்புகளைக் முன்கூட்டியே தந்து , போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குக் கூரியர் மூலம் கடிதங்கள் அனுப்புகிறான். கைது செய்யப்பட்ட பயங்கரவாதத் தலைவன் 'ஷாகுல் இக்பாலை' விடுதலை செய்ய கோருகிறான்.
    
    மேலும் இரு குண்டுவெடிப்புகள் நிகழ இருக்கின்றன. போலீசார் அடிபணிந்தார்களா? அவர்கள் கருப்புசாமியின் இருப்பிடத்தைக் கண்டறிந்தார்களா? போலீஸ் விசாரணைகளின் மூலம் துப்புத் துலக்குவதில், துப்பாக்கிச் சூட்டில் இருந்து மீண்டு படுக்கையில் கிடக்கும் ஒரு காவல்துறை அதிகாரியின் இளம் மகனான கல்லூரி மாணவனின் பங்கு என்ன? அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளை காவல்துறை முறியடித்ததா?
    Mostra libro
  • Oomatham Pookal - cover

    Oomatham Pookal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    கார்டியாலஜிஸ்ட் அனந்த கிருஷ்ணனும், ஹரேஷூம் ஃபைவ் ஸ்டார் அந்தஸ்தோடு கூடிய மிகப் பெரிய ஹாஸ்பிடலை நடத்தி நகரில் நல்ல பெயர் எடுத்து இருப்பதால் அவர்களுக்கு எதிரிகளும் உருவாகிறார்கள். அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கெட்டப் பெயரை உண்டாக்க வேண்டும் என்பதற்காக மறைமுக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அனந்த கிருஷ்ணனை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
    
    போலீஸ் விசாரணையில் இறங்கி டாக்டர்கள் அனந்த கிருஷ்ணனுக்கும், ஹரேஷூக்கும் எதிராகவும், மறைமுகமாகவும் செயல்படுபவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது, அவர்களால் முடியாமல் போகவே க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக் அதிரடியாய் விசாரணையில்
    இறங்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
    விவேக்கின் புத்திசாலித்தனமான நுணுக்கமான புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி யார் என்பது தெரியும்போது அனைவர்க்கும் மிகப்பெரிய அதிர்ச்சி
    ஏற்படுகிறது.
    
    "அது எதுமாதிரியான அதிர்ச்சி என்று அறிய விருப்பமா ? "க்ரைம் த்ரில்லரான ஊமத்தம்பூக்கள் நாவலை ஒலி வடிவில் கேளுங்கள்.
    Mostra libro
  • Detective DK | Case No:05 | Who Killed Sneha? - A cold case - cover

    Detective DK | Case No:05 | Who...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    A young woman named Sneha is murdered and hidden in a restaurant's freezer. Detective DK takes on the case. When the truth behind Sneha's killer is revealed, it will shock everyone listening to this story! 
    ஒரு உணவகத்தில் இருக்கும் Freezer-க்குள் ஒரு இளம்பெண் சினேகாவை கொலைசெய்து மூடி வைத்திருக்கிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க டிடெக்ட்டிவ் DK வருவான். "யார் சினேகாவை கொன்றது?" என்று தெரியவரும் போது, இந்த கதையை கேட்பவர்கள் அதிர்ந்து போவார்கள்.
    Mostra libro
  • Adhirum Udhiram - cover

    Adhirum Udhiram

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Crime against women is one of the most common news we read/hear about. This blood-curdling book talks about a new kind of crime against women. Listen to Adhirum Udhiram to know more.
    
    மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பெண்மை பலரால் போற்றப்பட்டுக்கொண்டு இருந்தாலும் ஒரு சிலரால் அந்தப் பெண்மை
    கயமைப்படுத்தப்பட்டு வருகிறது. பாலியல் சீண்டல், பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு என்ற பெயர்களில் பெண்கள் சீரழிக்கப்பட்டு வருவதை நாளிதழ்களில் படித்தும், தொலைக்காட்சிகளில் செய்திகளாக
    கேட்டும் வருகிறோம். மாதர் சங்கங்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்துகின்றன.  அண்மைக்காலமாய் பெண்களின் மேல் இன்னொரு விபரீதம் அரக்கத்தனமாய் பாய்ந்து குதறி எடுத்துக்கொண்டு இருக்கிறது. அது எதுமாதிரியான விபரீதம் என்பதை நீங்கள் அறிய நேரும்போது உங்களின் உதிரம் அதிரப்போவது உறுதி.
    Mostra libro