Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
ஆச்சர்யம்! ஆனால் உண்மை! - cover

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!

ரமணிசந்திரன்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

போலீஸ் உத்யோக அட்டையைப் பார்த்ததும் அதற்குள் முகம், கழுத்து, பிடரி என்று அவசர அவசரமாய் வியர்த்தான் கௌதமன்.“வா... வாட்... டு...யூ... வாண்ட்... ஸார்...”“உங்க பேரென்ன?”“கெளதமன்.”“இந்த பாருக்கு அடிக்கடி வருவீங்களா?”“நோ நோ அக்கேஷனல்.”“பெர்மிட் வெச்சிருக்கீங்களா...?”“ம்...”“ஷோ... மீ...”கோட்டின் இடது பக்க பாக்கெட்டில்வைத்திருந்த பெர்மிட் கார்டை எடுத்துக் காட்டினான். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு - அவனிடமே கொடுத்தார்.“ஸாரி ஃபார் த ட்ரபிள்... ப்ளீஸ் கேரி ஆன்...”கௌதமனுக்கு மனதில் தைரியம் ஊறியது. கேட்டான்.“ஸாரி... எதுக்காக இந்த என்கொய்ரின்னு தெரிஞ்சுக்கலாமா...?”ஆபீஸர் புன்னகைத்தார்.“இந்த ‘பார்’க்குள்ளே சில பேர் போதை மருந்துகளைக் கொண்டு வந்து யூஸ் பண்றதா எங்களுக்கு தகவல் வந்தது. அதான் இந்த செக்கிங். வாரத்துல ரெண்டு தடவை இது மாதிரியான செக்கிங் வருவோம்...” சொல்லிக் கொண்டே பக்கத்து மேஜையிலிருந்த இளைஞர்களை நோக்கிப் போனார்.கௌதமன் அவசர அவசரமாய் சிக்கனை விழுங்கினான். பேரர் அதற்குள் கொண்டுவந்திருந்த - செக்கண்ட் லார்ஜையும் மடமடவென்று உள்ளே தள்ளி - டம்ளரை கீழே வைத்தான். பேரரை கையசைத்துக் கூப்பிட்டு “பில்” என்றான்.பில் வந்தது.! - அமௌண்ட் எவ்வளவு என்று பார்த்து ரூபாய் நோட்டுக்களைத் திணித்துவிட்டு எழுந்தான். இளைஞர்களிடம் பெர்மிட் கார்டு வாங்கி பார்த்துக் கொண்டிருந்த விஜிலென்ஸ் ஆபீஸரை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே ‘விறுவிறு’வென்று நடந்து பாரை விட்டு வெளியே வந்தான்.இப்போது மழை லேசாய் தூறிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்து கொண்டிருந்த கார்களின் மண்டைகள் குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னியது.‘மிருதுளா அறைக்குள் பிணமாய் கிடப்பது எந்த நிமிஷமும் வெளிப்பட்டு விடலாம்...’‘சீக்கிரம் ஹோட்டலை விட்டு வெளியேறி விடுவது உத்தமம்.’பார்க்கிங்கைத் தொட்டு தன் கண்டேஸாவுக்குள் நுழைந்தான். இக்னீஷியனை உசுப்பி, காரை வெளியே கொண்டு வந்து விரட்டினான். கார் ட்ராஃபிக்கில் கலந்ததும் உற்சாகம் கொப்பளித்தது.‘இனிமேல் கவலையில்லை...’ஆக்ஸிலேட்டரை அவனுடைய வலது கால் அழுத்திப் பிடித்தது.காலிங் பெல் வீறிட்டு அலறிய சத்தம் கேட்டு, மெடிசன் சம்பந்தப்பட்ட புத்தகமொன்றில் ஆழ்ந்திருந்த டாக்டர் அற்புதராஜ் எழுந்து போய் தாழ்ப்பாளை விலக்கினார்.கதவுக்கு வெளியே –கௌதமன்.அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி தன் பெரிய நெற்றியை மேலேற்றினார்.“என்னாச்சு கெளதம்...?”உள்ளே வந்தான் அவன்.“மொதல்ல கதவைச் சாத்துங்க டாக்டர்...”அவர் கதவை சாத்தி தாழிட்டு விட்டு வந்தார். ஆர்வம் தாளாமல் கௌதமனின் தோள்களைப் பற்றிக் கொண்டார்.“என்ன...?”“காரியத்தை முடிச்சுட்டேன்...”“குட்... டைமண்ட் எங்கே...?” கோட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து கர்ச்சீப்பில் சுற்றி வைத்திருந்த அந்த வைரத்தை எடுத்துக்காட்டினான். டாக்டர் அற்புதராஜ் கண்களை விரித்து, உதட்டை குவித்து சந்தோஷமாய் ஊளையிட்டார்.“வீ காட் இட்! கெளதம் யூ ஹேவ் டன் ஏ மார்வலஸ் ஜாப். மிருதுளாவை முடிச்சுட்டு தானே கொண்டு வந்தே?”“ஆமா...”“யாரும் பார்த்துடலையே?”“பார்க்கிற மாதிரியா காரியம் பண்ணுவேன்? எட்டே நிமிஷம். பார் பின்பக்க மாடிப்படி வழியா மிருதுளாவோட ரூமுக்குப் போய் அவளுக்கு ஒரு தோட்டாவை குடுத்துட்டு நான் இந்த ‘சூரஜ்’ஜை கொண்டு வந்துட்டேன்...”“சரியா சுட்டியா?”“தோட்டா சரியா மார்பில் பாய்ஞ்சிருச்சு.”“செத்துட்டாளான்னு பார்த்தியா?”“பார்க்கலை. ஆனா செத்துடுவா?”நீ பார்த்துட்டு வந்திருக்கணும். இல்லை ரெண்டாவது தடவையாவது சுட்டிருக்கணும். ஏன்னா கடைசி நேரத்துல இந்த மாதிரியான விஷயங்கள் காலை வாரும். தோட்டா சரியா மார்புல பாயாமே, அதுக்கு மேலேயோ, கீழேயோ, பாய்ஞ்சிருந்தா அரை மணி நேரத்திலிருந்து ரெண்டு மணி நேரம் வரைக்கும் உயிரோடு இருக்க வாய்ப்பிருக்கு. அந்த நேரத்துல அவ சுட்டது யார்னு போலீஸ்கிட்டே ஸ்டேட்மெண்ட் கொடுக்க வாய்ப்பிருக்கே?”கௌதமனின் நெற்றி இப்போது வியர்த்து. மினுமினுத்தது
Disponibile da: 08/02/2024.
Lunghezza di stampa: 96 pagine.

Altri libri che potrebbero interessarti

  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Mostra libro
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Mostra libro
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Mostra libro
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Mostra libro
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Mostra libro
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Mostra libro