Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளைத் திறம்பட்ட தகவல் பரிமாற்றம் மூலம் வளர்க்கும் உத்திகள் - cover

நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளைத் திறம்பட்ட தகவல் பரிமாற்றம் மூலம் வளர்க்கும் உத்திகள்

Owen Jones

Casa editrice: Tektime

  • 0
  • 0
  • 0

Sinossi

“உறவுகளும் தகவல் பரிமாற்றத் திறமைகளும்” என்ற இந்த நூல், வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க உதவும் கருவிகள் மற்றும் நுட்பங்களை அறிந்துகொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தகவல் பரிமாற்றத்தின் அடிப்படைகள், கலாச்சார வேறுபாடுகள் மற்றும் கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றைப் புரிந்துகொள்ள, இந்த நூல் நடைமுறை பயிற்சி அறிவுறுத்தல்களை வழங்குகிறது. நீங்கள் சிறந்த வகையில் தகவல்களைப் பரிமாற்றம் செய்து வலுவான மற்றும் நிறைவான உறவுகளை வளர்க்க நிகழ் உலக உதாரணங்களையும் வழங்குகிறது. இந்த நூல் முழுவதிலும், தகவல் பரிமாற்றத் திறன்களை எப்படி
வளர்த்துக்கொள்வது, உணர்ச்சிகளை எப்படி அறிந்து அவற்றைச் சமாளிப்பது, பரிவு மற்றும் கவனமாகக் கேட்கும் திறனை வளர்ப்பது மற்றும் உறுதியுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் வழிமுறைகளை உருவாக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது, நம்பிக்கையை
வளர்ப்பது, உறவுகளின் நெருக்கத்தை அதிகரிப்பது மற்றும் திறம்பட்ட தகவல் பரிமாற்றத்தின் மூலம் உறவுகளை வளர்ப்பது போன்றவற்றையும் தெரிந்துகொள்வீர்கள். காதல் உறவு, நட்பு, தொழில்ரீதியான உறவு, இவற்றில் எந்த வகையான உறவாக இருந்தாலும், அதற்குத் தேவையான கருத்துகளை இந்த நூல் வழங்கும். வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய உலக சூழலில், வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் “உறவுகளும் தகவல் பரிமாற்றத் திறமைகளும்”.PUBLISHER: TEKTIME
Disponibile da: 16/12/2023.
Lunghezza di stampa: 102 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Valmiki Ramayanam Part 4 - Kishkintha Kandam - cover

    Valmiki Ramayanam Part 4 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனையும் சுக்ரீவனையும் சந்திப்பது, சுக்ரீவனுடன் நட்பு கொள்வது, வாலி-சுக்ரீவன் கதை, ராமர் வாலியைக் கொன்று, சுக்ரீவனை வானர அரசனாக்குவது, சுக்ரீவன் தன் வானரர்களை சீதையைத் தேடும் பணியில் அனுப்புவது, அங்கதன் தலைமையில் தெற்கே செல்லும் வானரர் படை, கழுகு சம்பாதியின் மூலம் சீதை இலங்கையில் இருப்பதை அறிவது, ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பறந்து செல்லத் தயாராவது – ஆகியவை இடம் பெறுகின்றன.
    Mostra libro
  • தொல்காப்பியம் - cover

    தொல்காப்பியம்

    தஞ்சை தொல்காப்பியர்

    • 0
    • 0
    • 0
    தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. 
    தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம், எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது. 
    எழுத்ததிகாரம் 
    நூல் மரபு மொழி மரபு  பிறப்பியல்  புணரியல் தொகை மரபு உருபியல் உயிர் மயங்கியல்  புள்ளி மயங்கியல்  குற்றியலுகரப் புணரியல்  
    சொல்லதிகாரம் 
    கிளவியாக்கம் வேற்றுமை இயல் வேற்றுமை மயங்கியல் விளி மரபு பெயரியல் வினை இயல் இடையியல் உரியியல் எச்சவியல் 
    பொருளதிகாரம் 
    அகத்திணையியல் புறத்திணையியல் களவியல்  கற்பியல்  பொருளியல் மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் 
    தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம். 
    தொல்காப்பிய நூற்பாக்கள் அனைத்தையும் ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் கேட்கலாம்.
    Mostra libro
  • Avvaiyar Aathichudi - Tamil AudioBook - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Aathichudi - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    ஆத்திசூடி என்பது  ஒளவ்வையார் எழுதிய புகழ்பெற்ற நூல். இந்நூலில் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு நல்லொழுக்கக் கருத்து வழங்கப்பட்டுள்ளது. 
    இதில் தர்மம், ஒழுக்கம், கல்வி, அன்பு, அடக்கம், பணிவு, கடமை போன்ற வாழ்க்கை வழிகாட்டும் நெறிமுறைகள் எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளன. 
    ஆத்திசூடியை படிப்பதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒழுக்க நெறி, பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். 
    இது தமிழ் இலக்கியத்தின் அடித்தள நூல்களில் ஒன்றாகவும், பள்ளிக் கல்வியில் அவசியமான பாடமாகவும் போற்றப்படுகிறது.
    Mostra libro
  • Pavalakkoti - cover

    Pavalakkoti

    Pukazhendi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Mostra libro
  • Kadhai Kadhayam Karanamam - Vol 1 - கதை கதையாம் காரணமாம் - Stories for Children - cover

    Kadhai Kadhayam Karanamam - Vol...

    Pavala Sankari

    • 0
    • 0
    • 0
    Vol 1. Childrens stories including moral value. குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பு 
    Mostra libro
  • Valmiki Ramayanam Part 2 - Ayodhya Kandam - cover

    Valmiki Ramayanam Part 2 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    அயோத்தியா காண்டத்தில், ராமனின் சிறந்த குணங்களால் நாட்டுமக்கள் அவரை நேசித்தது, ராமனுக்கு முடிசூட்ட தசரதர் தீர்மானித்தல், மந்தரையின் துர்போதனையால் கைகேயி தசரதமிடமிருந்து பிடிவாதமாய் வரம் கேட்டு வாங்கியது, அதனால் தசரைப் பீடித்த சோகம், கைகேயி பெற்ற வரப்படி ராமர் காட்டுக்குப் புறப்படத் தயாராவது, அவருடனேயே சீதையும் லக்ஷ்மணனும் வனம் செல்வது, ராமரைப் பிரிய இயலாமல்  அயோத்தி மக்கள்  தொடர்ந்து அவர் கூடவே வருவது, ராமர் வேடுவ அரசன் குஹனை சந்திப்பது, பரத்வாஜ முனிவர் வழி காட்டியபடி, சித்ரகூடத்தில் சென்று வாசம் செய்வது, அயோத்தியில் ராமரின் பிரிவு தாங்காமல் மன்னர் தசரதர் மரணமடைவது,  பரதன் அயோத்திக்கு  வந்து, சேதி கேட்டுத் தன் தாயைக் கோபிப்பது, பரதன் ராமரைக் கூட்டி வரப் பெரும் படையுடன் காட்டுக்குச் செல்வது, ராமரை நாடு திரும்பச் சொல்லி வற்புறுத்துவது, அது நடக்காததால் ராமரது பாதுகளைப் பெற்று பரதன் நாடு திரும்பிவந்து பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் செய்து ராமரது பிரதி நிதியாய் நாட்டை ஆள்வது – ஆகியவை இடம்பெறுகின்றன.
    Mostra libro