Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - உங்கள் நேரத்தை மேம்படுத்தி அதிகபட்ச விளைவுகளை அடைவது எப்படி - cover

நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - உங்கள் நேரத்தை மேம்படுத்தி அதிகபட்ச விளைவுகளை அடைவது எப்படி

Owen Jones

Casa editrice: Tektime

  • 0
  • 0
  • 0

Sinossi

இந்தப் புத்தகம் உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் உங்கள் ஆக்கவளத்தை அதிகரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய  உத்திகள் மற்றும் நுட்பங்களை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையின் அடிப்படைக் கொள்கைகள் முதல் சிக்கலானத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் நேரத்தைக் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும் செயற்படுத்தக்கூடிய குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிரம்பியுள்ளன.நேரம் என்பது ஒரு முடிவடையக்கூடிய வளமாகும். இருப்பினும் அதைப் பயனுள்ள வகையில் நிர்வகிக்க பெரும்பாலும் நாம் போராடுகிறோம். முடிவில்லா செய்ய வேண்டியவை பட்டியல்கள், தொடர்ச்சியான கவனச்சிதறல்கள் மற்றும் எதை முன்னுரிமைப்படுத்துவது என்ற குழப்பம் ஆகியவற்றால் நாம் ஆட்கொள்ளப்பட்டு ஆதாயமின்றிப் பணிகள் செய்வது எளிதில் நிகழக்கூடியதாகும். நேர மேலாண்மை மற்றும் ஆக்கவளம் என்ற கலையைச் சரியாகக் கையாள்வதன் மூலம் உங்கள் நேரத்தின் முழு ஆற்றலையும் கைப்பற்றி உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் இலக்குகளை அடையலாம். இந்தப் புத்தகம் உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் உங்கள் ஆக்கவளத்தை அதிகரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய  உத்திகள் மற்றும் நுட்பங்களை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையின் அடிப்படைக் கொள்கைகள் முதல் சிக்கலானத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் நேரத்தைக் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும் செயற்படுத்தக்கூடிய குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிரம்பியுள்ளன. நீங்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு தொழில்வல்லுநராக இருந்தாலும், அதிக பணிச்சுமை உள்ள மாணவர்களாக இருந்தாலும் அல்லது தங்கள் நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்த விரும்புபவராக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் உங்களுக்கு வெற்றிபெற தேவையான கருவிகளை வழங்கும். எனவே, நேர மேலாண்மை மற்றும் ஆக்கவளம் என்ற கடலில் மூழ்கி, உங்கள் நேரத்தை உகந்ததாக்கி அதிகபட்ச விளைவுகள் என்ற வெற்றி முத்துக்களை எடுப்போம். இந்தப்புத்தகம் உங்களுக்கு உதவிகரமாகவும், பயனுள்ளதாகவும் லாபகரமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.PUBLISHER: TEKTIME
Disponibile da: 08/09/2023.

Altri libri che potrebbero interessarti

  • Avargalai Odhukkaatheerkal - cover

    Avargalai Odhukkaatheerkal

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Mostra libro
  • வம்ச விருத்தி - Vamsa Vruthi - Short Story Collection - cover

    வம்ச விருத்தி - Vamsa Vruthi -...

    A. Muttulingam

    • 0
    • 0
    • 0
    1. துரி  
    2. ஒரு சாதம்  
    3. கிரகணம்  
    4. விழுக்காடு  
    5. பீஃனிக்ஸ் பறவை  
    6. முழுவிலக்கு  
    7. முடிச்சு  
    8. ஞானம்  
    9. சிலம்பு செல்லப்பா  
    10. வம்ச விருத்தி  
    11. பருத்திப் பூ  
    மாலன் அவர்கள் முன்னுரையில் இருந்து ஒரு சில துளிகள் வார்த்தைகளை அளந்தெடுத்துக் கச்சிதமாகப் பயன்படுத்தினாலும் முத்துலிங்கம் வார்த்தைகளை மட்டுமே நம்புவதில்லை. சின்னச்சின்ன காட்சிகளைக் கூர்மையாகத் தீட்டிக் கதை நடுவில் செருகிவிடுகிறார். விழுக்காட்டில், இலையான் புழு எடுக்கும் காட்சி, துரியில் காருக்குள் துரியோதனன் தவிக்கும் காட்சி, வம்சவிருத்தியில், மிர்ஸாவை இப்ராஹ’ம் சுட்டுக் கொல்லும் காட்சி எல்லாவற்றிலும் தனியொரு சிறுகதை மட்டுமல்ல, கொஞ்சம் டிராமாவும் இருக்கிறது.இலங்கை எழுத்துக்களின் வாசனையை நான் கொஞ்சம் லேசாக அறிவேன் என்ற போதிலும், நூலாசிரியரின் படிப்பிற்கும், இலக்கிய ரசனைக்கும் மனித நேசத்திற்கும் கூட இந்தப் புத்தகம் சாட்சியளிக்கிறது. ஒரு பிரமிப்போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நீங்களும் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள். 
    ஆசிரியர் உரையிலிருந்து ஒரு சில துளிகள் ஒரு 'கதைசொல்லி' தான் சொல்லவந்த கதையை வாசகனுக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டிய முறையில் சொல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்தைப் பொறுத்து வடிவம் சில வேளைகளில் சிறிது மாறுபடலாம். கதைப்பொருள்தான் முக்கியம். ஆனால் கதையினுடைய 'தொணி' மாத்திரம் மாறாமல் கதையை ஊடுருவி நிற்கவேண்டும். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.பதிப்பரை'வம்ச விருத்தி'யில் உள்ள கதைகள் பல, தமிழுக்குப் புதித
    Mostra libro
  • Kalviya Bhaktiya - cover

    Kalviya Bhaktiya

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Mostra libro
  • Neenilade Nanagenidhe - cover

    Neenilade Nanagenidhe

    Dr. Virupaksha Devaramane

    • 0
    • 0
    • 0
    ಖ್ಯಾತ ಮನೋವೈದ್ಯರಾದ ಡಾ.ವಿರೂಪಾಕ್ಷ ದೇವರಮನೆ ಅವರು ಬರೆದಿರುವ ಈ ಪುಸ್ತಕ ಸುಂದರ ದಾಂಪತ್ಯಕ್ಕೊಂದು ಸರಳವಾದ ಕೈಪಿಡಿಯಂತಿದೆ.
    Mostra libro
  • Kaathiruppaan Kamala Kannan - cover

    Kaathiruppaan Kamala Kannan

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Mostra libro
  • Kadavulai Kondravan - கடவுளைக் கொன்றவன் - Short Story Collection - cover

    Kadavulai Kondravan - கடவுளைக்...

    Anonimo

    • 0
    • 0
    • 0
     Kadavulai Kondravan - an aurality audio book production - சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது. ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும். சித்ரூபனின் கதை மாந்தர்கள் எளிய மனிதர்கள். அவர்களில் அதிகாரம் வாய்க்கப் பெற்றவர்கள் வன்மம் கொண்டவர்களாகத் திரிந்து போகிறார்கள். அவர்கள் அப்படித் திரிந்து போனதற்கான காரணங்களைச் சித்ரூபன் ஆராய்வதில்லை. அது அவர் நோக்கமும் இல்லை. அவர்கள் கையில் அதிகாரமற்ற எளியவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களைச் சொல்லவே - அதாவது படம் பிடிக்கவே - அவர் முனைகிறார், அதில் பெருமளவு வெற்றியும் பெறுகிறார். சித்ரூபனின் கதைகள் நல்ல வாசிப்பனுபவம் தருபவை. ஆனால் அதையும் தாண்டி அவை வேறு பலவற்றையும் உணர்த்துகின்றன. அதனால் இன்றையக் கதைவெளியில் அவை அவசியமானவையாகின்றன. - மாலன் 'சித்ரூபன்' என்ற புனைபெயரில் எழுதி வரும் ராமன் சென்னையில் 1962ல் பிறந்தவர். சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழின் பிரபலமான வார, மாத இதழ்களில் இவருடைய படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. 
    Chithroopan சித்ரூபன் (Author) எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iphone app store and other places 
    Mostra libro