Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
ஒளி தரும் உதயம் - cover

ஒளி தரும் உதயம்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

ரோஜா மாலைக்கு நடுவில் கம்பீரமாக புன்னகைத்த படி காட்சி தரும் கணவனை பார்க்கிறாள் சிவகாமி.உங்க உழைப்பிலும், முயற்சியில் உருவானது இந்தகுடும்பம். இன்னைக்கு ஸ்பின்னிங் மில், நாற்பது கடை வாடகைக்கு விட்டிருக்கும் பெரிய மால், இதோ இத்தனை பெரிய கடல் போன்ற வீடு எல்லாமுமே நீங்க சம்பாதித்து கொடுத்தது. நம்ப இரண்டு மகன்களும் இதை கட்டி காக்கிறாங்க. எந்த குறையுமில்லாமல் இரண்டு பேருக்கும் கல்யாணமும் பண்ணி வச்சுட்டு தான் நீங்க போனீங்க... இன்னைக்கு பேரன், பேத்தின்னு நம்ப வம்சம் தழைச்சுட்டு இருக்கு. இருந்தாலும் எனக்கு நிறைவு இல்லைங்க... மனசெல்லாம் பாரமாக இருக்கு. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரியான உணர்வு தான் இருக்குங்க. இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு உங்களுக்கே தெரியும்.நம்ப மூணாவது மகன் சுதாகர். இருபதைந்து வயதைதொட்டுட்டான். அவன் கிட்டே பெரிசா எந்த மாற்றமும் இல்லை. நீங்க இருக்கும் போதே எவ்வளவு டீரிட்மெண்ட்... மருந்து மாத்திரைகள். இது பிறவி குறைபாடு. மூளை வளர்ச்சி இயல்பாக இல்லை. இதனால் பெரிசா எந்த பாதிப்பும் வராது. வளர வளர புரிஞ்சுக்கிற தன்மை அதிகரிக்கும். பெரிசா முன்னேற்றம் கிடைக்கலைன்னாலும்... இயல்பான ஆண்மகனாக இருப்பான். பயப்படாதீங்கன்னு டாக்டர் சொன்னாரு. ஸ்பெஷல் ஸ்கூலில் படிக்க வச்சோம். கஷ்டப்பட்டு பத்தாவது வரை படிச்சான். உடல் வளர்ச்சியில் எந்த குறையும் இல்லைங்க... உங்க சாயலில், கம்பீரமாக ஒரு ஆண்மகனாக, இளமைக்கே உரிய பொலிவோடு இருக்கான். அறிவு வளர்ச்சி, சுயமாக சிந்திக்கும் திறன், எதுவும் இல்லைங்க. மத்தவங்க சொல்றதை கேட்கிறான். அவ்வளவு தான்.எவ்வளவு நாள் நான் அவனுக்கு துணை வர முடியும். எனக்கு பிறகு அவன் வாழ்க்கை... நினைக்கவே பயமா இருக்குங்க...சிவகாமியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.“அம்மா... அம்மா...”சமையல்காரி வேதா கூப்பிடுவது கேட்க,முந்தானையால் கண்ணீரை துடைத்தவளாய், அறையை விட்டு வெளியே வருகிறாள்.“அம்மா... நம்ப சுதாகர் தம்பி இன்னும் சாப்பிட வரலைம்மா... பசி தாங்க மாட்டாரு. எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட வந்துடுவாரு... பெரியவங்க இரண்டு பேரும் சாப்பிட்டு கிளம்பிட்டாங்க... அதான் உங்க கிட்டே சொல்லலாம்னு கூப்பிட்டேன்.”மாடி ஏறுகிறாள்.“சுதாகர்... சுதா எங்கேப்பா இருக்கே?”மாடியில் பெரியவன் சுந்தருக்கும், அடுத்தவன் சுரேனுக்கும் தனி, தனி ரூம்கள் இருக்க,சுதாகருக்கென்று ஒதுக்கப்பட்ட ரூம் அனைவரும் உபயோகப் படுத்தும் அறையாக மாறிவிட, அதை பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத சுதாகர், அம்மாவின் ரூமை பயன்படுத்தி கொண்டான். இரவு படுப்பதும் அவள் ரூமில் தான்.“சுதாகர், நீ சின்னவனாக இருந்த வரைக்கும் அம்மாவுடன் இருந்தே... இப்ப இளைஞனான பிறகும், இன்னும் அம்மாவை தேடிவர்றியே... உன் ரூமில் படுத்துக்கப்பா...”“போம்மா... சின்ன பிள்ளையிலிருந்து நீ தானே எனக்கு அம்மா... இப்ப மட்டும் ஏன் நான் உன்னை பிரியணும். இங்கே தான் இருப்பேன்.”“இவனுக்கு எப்படி புரிய வைப்பது...”அவள் ரூமிலும் சுதாகரை காணாமல், திரும்பவும் கூப்பிடுகிறாள். “சுதாகர்... எங்கே இருக்கே?”“இங்கே வாம்மா... சின்ன அண்ணன் சுரேன் ரூமில் இருக்கேன் பாரு...”அங்கே என்ன செய்கிறான், உள்ளே நுழைந்தவள்சுரேனின் மனைவி தீபாவின் அலமாரியில் புடவைகளை வரிசைப் படுத்தி அடுக்கி கொண்டிருக்கிறான் சுதாகர்.“என்னப்பா இது... இந்த வேலைகளை நீ செய்யலாமா... எழுந்திரு.”“தீபா அண்ணி தான், எந்த வேலையும் பார்க்காமல் சும்மா இருக்கே. என் புடவை அலமாரியெல்லாம் ஒழுங்கா அடுக்கி வை. நான் ப்யூட்டி பார்லர் போய்ட்டு வரும் போது, எல்லாம் வரிசையாக ஒழுங்காக அடுக்கி வச்சுருக்கணும்னு சொல்லிட்டு போனாங்க.”கடவுளே இவன் அறியாமையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் இவனிடம் எப்படி வேலை வாங்குகிறார்கள்.‘இவனும் இந்த வீட்டில் சமபங்கு உரிமை உள்ளவன் இவனை ஒரு வேலைக்காரனை போல் அல்லவா நடத்துகிறார்கள்.நேற்று சாயந்திரம் சுந்தரின் மனைவி பூஜா... இவனிடம், சுந்தரின் ஷுவை பாலிஷ் பண்ணி வைக்க சொல்லியிருக்கிறாள். கையில் எல்லாம் கறுப்பு பாலிஷ் பூசிக் கொண்டு வந்து நின்னவனை பார்த்து திகைத்து போனாள்
Disponibile da: 12/02/2024.
Lunghezza di stampa: 65 pagine.

Altri libri che potrebbero interessarti

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Mostra libro
  • Anthology 3 - cover

    Anthology 3

    Bharathidasan

    • 0
    • 0
    • 0
    பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாக சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். 
    அவருடைய கவிதைகள் 3 தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. அவற்றுள் மூன்றாம் தொகுப்பின் முதல் ஒலிக்குதிரில் மூன்றாம் தொகுப்பின் நெடுங்கதை கடல்மேற்குமிழிகள் கேட்கலாம். இரண்டாம் ஒலிக்குதிரில் மூன்றாம் தொகுப்பின் அமிழ்து எது, அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துக் கதை ஆகியவற்றைக் கேட்கலாம். மூன்றாம் ஒலிக்குதிரில் மூன்றாம் தொகுப்பின் ஏற்றப் பாட்டு, திராவிடர் திருப்பாடல், சமத்துவப்பாட்டு, புரட்சித்திருமணம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
    Mostra libro
  • Varuthichi - cover

    Varuthichi

    K Aravind umar

    • 0
    • 0
    • 0
    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களுடனும் வாழும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றவர் அரவிந்த் குமார். இதன் பிரதிபலிப்பை இவர் சிறுகதைகளில் காணலாம். எங்கிருந்தாலும் மனிதர்களின் தேடலும் ஆர்வமும் என்னென்னவாய் இருக்கின்றனவென்பதை இவரின் கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கை முயற்சியிலும் கண்டடைகின்ற உண்மைகளுக்கு விசுவாசமாய் இருக்க முனைகிற பாத்திரங்கள் இங்கே நிறைய! அன்பையும் உறவையும் மாத்திரமல்ல, வக்கிரங்களையும் கைமாற்றிக் கொடுக்கின்றவர்களோடும் நாம் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கிறோம்; அத்தகைய நிர்ப்பந்தங்களைக் கதைகளாக்கியிருக்கிறார் ஆசிரியர். மீற முயலாமலே மீறிச் செல்வதும் மீறிச் செல்ல முயன்றாலும் மடங்கி விழுவதுமென நம்மிடையே நிகழ்கிற ரசவாதங்களே அரவிந்தின் கதைகள்.
    
    The author has spent his life in many parts of the state, with a wide variety of people. These stories talk about what people are curious about, what they search for, wherever they are. They are filled with characters who are loyal to the truths they find. Our relationships are never exclusively with those who share love, but they are often exchanges of vulgarities as well. Aravind has managed to capture the essence of such exchanges in his stories.
    Mostra libro
  • Pattampoochiyum Thookkamum - cover

    Pattampoochiyum Thookkamum

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
    Mostra libro
  • Solaimalai Ilavarasi - cover

    Solaimalai Ilavarasi

    Kalki

    • 0
    • 0
    • 0
    விடுதலை போராட்ட வீரரான குமாரலிங்கம் ஆங்கில அரசால் தேடப்படுகிறான். அவர்களுக்கு பயந்து அவன் சோலைமலையில் உள்ள ஒரு பாழடைந்த அரண்மனையில் தங்குகின்றான். அங்கு இருக்கும் சமயம் அவன் கனவில் தன்னை 300 வருடங்களுக்கு முந்தைய மாறனேந்தல் இளவரசன் உலகநாத தேவனாக உணர்கின்றான். அங்கு மேலும் கதை 300 வருடங்களுக்கு முன்னால் பயணிக்கிறது. கல்கியின் அற்புதமான இந்த கதையை மேலும் அறியக் கேளுங்கள் சோலைமலை இளவரசி.
    Mostra libro
  • Kadaisi Theekkuchi - cover

    Kadaisi Theekkuchi

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஒரு விஞ்ஞானி தனது பயோ டெக்னாலஜி கண்டுபிடிப்புகளை எதிர்கால மனிதசமூகத்தை காப்பாற்றும் நோக்கில் தன் மனைவியுடன் பாதுகாக்க போராடுகிறார். தொடர்ச்சியாக உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல்களையும், எதிர்பாராத சம்பவங்களையும் இந்த ஜோடி ஒரு கொலையை மறைக்கும்போது எதிர்கொள்கின்றனர்.
    Mostra libro