லிட்டில் பிரின்சஸ்ஸும் பட்டாணியும்
Indira Srivatsa
Casa editrice: IN Publications
Sinossi
ஒரு காலத்தில் இளவரசர் ஒருவர், பெரிய அரண்மனையில் வாழ்ந்தார். ஆனால், இளவரசர் தனிமையில் இருந்தார். அவர் உண்மையில் ஒரு இளவரசியை மணக்க விரும்பினார்...
Casa editrice: IN Publications
ஒரு காலத்தில் இளவரசர் ஒருவர், பெரிய அரண்மனையில் வாழ்ந்தார். ஆனால், இளவரசர் தனிமையில் இருந்தார். அவர் உண்மையில் ஒரு இளவரசியை மணக்க விரும்பினார்...
பழைய பஞ்சதந்திரக் கதைகளை நீங்க கேட்டிருப்பீங்க—அதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி, சண்டை போட்டு, சில சமயம் கொடுமையா நடந்துக்கற கதைகள் தான் நிறைய இருக்கும், இல்லையா? சிட்டுக்குருவி போட்காஸ்ட் ல குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் தொடர்ல, பழைய கதைகளை கொஞ்சம் மாத்தி, கருணையும் நல்ல மனசும் பிரச்சனைகளை தீர்க்கும்ங்கிற முடிவோட உங்களுக்கு சொல்றோம். இதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் கொல்லாம, ஏமாத்தாம, புத்திசாலித்தனமா யோசிச்சு, உணர்ச்சிகளை சரியா புரிஞ்சுகிட்டு ஒத்துமையா வாழ கத்துக்கறாங்க. இந்தக் கதைகள் உங்களை சிந்திக்க வைக்கும், யோசிக்க வைக்கும், முக்கியமா, உங்கள சுத்தி இருக்குறவங்களோட சிரிச்சிகிட்டு கிரிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ உதவி பண்ணும்னு நம்பறோம்! கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!Mostra libro
Vol 1. Childrens stories including moral value. குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்புMostra libro
நல்வழி பாடல் என்பது ஒளவையார் எழுதிய நற்பண்பு மற்றும் ஒழுக்கக் கவிதைகளின் தொகுப்பு. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கை நெறி, ஒழுக்கம், மரியாதை மற்றும் நல்லொழுக்கப் பயிற்சிகளை எளிமையாக கற்றுத்தரும் இந்த நூல், தமிழ் கல்வி மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது.Mostra libro
யுத்த காண்டத்தில் ராமர் வானர சேனையுடன் கிஷ்கிந்தையிலிருந்து புறப்பட்டு தெற்குக் கடற்கரையை அடைவது, இலங்கையில் ராவணனுக்கு அறிவுரை சொன்ன தம்பி விபீஷ்ணன் ராவணனின் கோபத்துக்கு ஆளவது, விபீஷ்ணன் ராமரரிடம் வந்து சரணடைவது, கடலரசன் மீது ராமர் கோபத்தை வெளிப்படுத்துவது, கடலைக் கடந்து இலங்கை செல்லப் பாலம் கட்டுவது, இலங்கைக்கு வந்து சேர்ந்து போரைத் துவங்குவது, ராவணன் மகன் இந்திரஜித்தால் தாக்கப் பட்ட ராம லக்ஷ்மணர்களை கருடன் குணப்படுத்துவது, ராவணனின் தம்பி கும்பகர்ணன் போரில் மடிவது, இந்திரஜித்தால் மீண்டும் படுகாயப் பட்ட ராம லக்ஷ்மணர்களை குணப்படுத்த அனுமார் ஸஞ்சீவனி மூலிகை மலையைத் தூக்கி வருவது, லக்ஷ்மணன் இந்திரஜித்தைக் கொல்வது, ராமர் கடைசியில் பிரம்மாஸ்திரம் கொண்டு ராவணனை வதம் செய்வது, சீதையைத் தீக்குளிக்கச் செய்து அவளது தூய்மையை உலகுக்கு நிரூபிப்பது, அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் எல்லாரும் திரும்பி வருவது, பதினான்காண்டு வனவாசம் முடிந்து வந்த ராமரை பரதன் வரவேற்பது, ராம பட்டாபிஷேகம் நடந்து மீண்டும் அயோத்தி மன்னராய் பொறுப்பேற்பது – ஆகியவை இடம்பெறுகின்றன.Mostra libro
ராமரைச் சந்தித்து வாழ்த்த வந்த அகஸ்திய முனிவர் ராமருக்கு ராவணனின் முழு சரித்திரத்தை சொல்ல ஆரம்பிப்பது, ராவணனின் முன்னோர்கள் பற்றிய கதைகள், ராவணனும் அவன் சகோதரர்களும் பற்றிய கதைகள், ராவணன் போர் வெறியுடன் பல உலகங்களுக்கும் திக் விஜயம் செய்து பலரையும் வெல்வது, ராவணனின் அகங்காரத்தை சிவபெருமான் அடக்குவது, ராவணன் குபேரனின் மகனிடமிருந்து சாபம் பெறுவது, ராவணன் வாலியிடமும், கார்த்த வீரியார்ஜுனனிடமும் அவமானப் பட்டு, சமாதானமாய்ப் போனது, ராவணன் மகன் இந்திரஜித்தின் அபார ஆற்றல் ஆகியவை முனிவரால் சொல்லப் படுகின்றன. தொடர்ந்து , அயோத்தி மக்கள் சீதையைப் பற்றி அவதூராய்ப் பேசியதை அறிந்த ராமர் அவளை வனவாசம் செய்ய அனுப்புவது, சீதை வால்மீகி முனிவருடன் தங்கி, ராமரின் வாரிசுகளான லவ குசர்களைப் பெற்றெடுப்பது, ராமரின் சிறப்பான ஆட்சி, பரதன், சத்ருக்னன், லக்ஷ்மணன் ஆகியோரின் வாரிசுகளுக்கு ஆள்வதற்கு நாடுகளை வழங்குவது, ராமர் சம்புகனை வதம் செய்வது, ராமர் அச்வமேத யாகம் நடத்திய சமயத்தில் லவ குசர்கள் வந்து வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்தைப் பாடுவது, ராமர் சீதையை மீண்டும் தன் கற்பை நிரூபிக்கக் சொல்வது, சீதை அழைத்ததும் அவள் தாய் பூமாதேவி வந்து தன்னுடன் பூமிக்கு அடியே பாதாள லோகத்துக்குக் சீதையை கொண்டு போய்விடுவது, சீதை இல்லாத ராமரின் துக்கம், மகாவிஷ்ணுவான ராமர் தம் அவதாரத்தை நிறைவு செய்து, அயோத்தி வாசிகளுடன் சரயூ நதியிலிறங்கி உலககைத் துறந்து வைகுண்டத்துக்குத் திரும்புவது – ஆகியவை இடம் பெறுகின்றன.Mostra libro
ஆரண்ய காண்டத்தில், சித்ரகூடத்தை விட்டு ராமர் சென்று வனத்துக்குள் தொடர்ந்து பயணிப்பது, விராதன் எனும் ராட்சசனை வதம் செய்வது, தவத்தால் பழுத்த பல ரிஷிகளையும் சந்திப்பது, அகஸ்திய முனிவரை தரிசிப்பது, அவர் ஆலோசனைப்படி பஞ்சவடியில் சென்று வாழ்வது, அங்கே வந்து தகாது நடந்து கொண்ட சூர்ப்பனகையை லக்ஷ்மணன் தண்டிப்பது, அதன் பலனாய் கர தூஷணர்கள் வந்து ராமருடன் போர் செய்வது, அவர்களை ராமர் வதம் செய்வது, சீதையின் அழகைப்பற்றி சூர்பனகையிடமிருந்து கேட்ட ராவணன், மாரீச மானின் உதவியுடன் சீதையைக் கவர்ந்து செல்வது, , சீதையை இழந்த ராமர் அளவிலா துக்கத்தில் ஆட்படுவது, கழுகு ஜடாயு சீதைக்கு உதவ முயன்று ராவணனால் வெட்டுப் பட்டு சாவது, ராவணன் சீதையை இலங்கைக்குக் கொண்டு சென்று சிறை செய்வது, ராமர் கபந்தன் எனும் ராட்சசனை வதம் செய்வது, வானரன் சுக்ரீவனைத் தேடி பம்பா ஏரிக்கு செல்வது, அங்கே சபரிக்கு அருள் செய்வது, ருஷ்ய சிருங்க மலையயை நாடிச் செல்வது – ஆகியவை இடம் பெறுகின்றன.Mostra libro