Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
பூவே உன்னை நேசித்தேன் - cover

பூவே உன்னை நேசித்தேன்

ஆர்.மகேஸ்வரி

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

கல்வராயன் மலை!
 
அந்த மலைத்தாயின் மடியில்... சுகமாய்த் துயில்கொள்ளும் நிலமகளின் முகத்தில்... அன்பின் உயிர்நிலை மிளிர்கிறது! 
 
அழகிய மலையடிவாரக் கிராமம் 'சக்ரவர்த்திபுரம்!'
 
இயற்கையின் இனிய சூழலில் அமைந்திருக்கும்... அந்தச் சுந்தர பூமி... சொர்க்க பூமி... தன்னைக் காண வருவோரையெல்லாம்... பச்சைக் கம்பளம் விரித்து... குளுமையுடன் வரவேற்றுக் கொண்டிருக்கிறது! 
 
எங்கும் பசுமை!
 
எங்கும் செழுமை!
 
எங்கும் இனிமை! 
 
காண்போரின் கண்களைக் கட்டியிழுத்துக் கொண்டிருக்கிறாள், நிலமகள்! 
 
சிலுசிலுக்கும் சாரலும்... சலசலக்கும் காற்றும் நிலவும்... மலையும் மலைசார்ந்த, 'குறிஞ்சிப் பூமி!' 
 
இயற்கையும், மனிதனும் இணைந்து வாழ்கிற வாழ்க்கைக்கான சான்றாகச் 'சக்ரவர்த்திபுரம்' திகழ்கிறது! 
 
'அர்ஜுன் இயற்கை உயிராற்றல் வேளாண் பண்ணை' நம்மை அன்புடன் வரவேற்கும்! 
 
அர்ஜுன் எம்.எஸ்ஸி. அக்ரி முடித்து... வாழையைப் பற்றி ஆராய்ந்து விவசாயத்திலே டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளான்! 
 
இயற்கை வேளாண்மையை உயிர் மூச்சாய்க் கொண்டவன்! 
 
அங்கே அவனுக்கு ஐந்நூறு ஏக்கருக்கு மேல் விவசாய நிலமிருக்கிறது. 
 
வேற்றுமை பார்க்காது... வறுமையில் வாடும் 150 குடும்பங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து... அதே நிலத்தில் ஸ்ட்ராங்கான வீடும் கட்டிக் கொடுத்திருக்கிறது. 
 
நிலம் அர்ஜுனுக்குச் சொந்தம்! அதில் உழுது, விதைத்து, அறுவடை செய்து உண்ணுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு!  
 
அவர்களுக்குக் காளை மாடு, பசுமாடுகள் வாங்க உதவி செய்து கொண்டிருக்கிறான்! 
 
அங்கு வசிக்கும் மக்களின் ஜீவ நாடியே அர்ஜுன் தான்! அவர்கள் எந்தக் குறையுமின்றி நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்! 
 
அவன் இருநூறு ஏக்கரில் விவசாயம் செய்கிறான்!
 
அந்த மக்களே... அவன் பண்ணையின் விவசாய வேலைகளுக்கு வருகிறார்கள்! 
 
நிறைவான கூலியைப் பெற்று இன்பமாய்ச் சுய கௌரவத்தோடு வாழ்கிறார்கள்! 
 
அவர்களின் பிள்ளைகள் படிக்கவே... தரமான பள்ளியைக் கட்டி... அருமையாய் நிர்வகித்து வருகிறான்! 
 
தொண்டுகள் பல ஆற்றி வருவதுடன்... அங்கே ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம், முதியோர்களுக் கான இல்லம் என்று செயல்படுகிறது! 
 
அங்குள்ளவர்கள் நோய் நொடி என்றால் இரண்டு கிலோ மீட்டர் பயணித்து எடுத்தவாய் நத்தம் பிரைமரி ஹெல்த் சென்டருக்கோ... அல்லது ஐந்து கிலோ மீட்டர் பயணித்துக் கச்சிராயபாளையம் பிரைமரி ஹெல்த் சென்டருக்கோ... அல்லது பெரிய நோய் என்றால் கள்ளக்குறிச்சி ஜி.ஹெச்சுக்கோ செல்ல வேண்டும். கள்ளக்குறிச்சிக்குப் போக வேண்டும் என்றால் பதினைந்து கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டும்! 
 
அங்குள்ள மக்கள் ஆஸ்பத்திரிக்குக் கஷ்டப்பட்டுத்தான் செல்வர்! 
 
இல்லத்துக் குழந்தைகளுக்கும்... பெரியவர்களுக்கும்... ஒரு நோய் நொடியென்றால் அங்கேதான் அழைத்துச் செல்ல வேண்டும்! 
 
அந்தச் சிரமங்களையெல்லாம் பார்த்து... தானே ஆஸ்பத்திரியும் ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற... உடனே செயல்படுத்தினான். 
 
அதனால், அந்தக் கிராம மக்களுக்கும், இல்லத்தவர்களுக்குமாகவே... அந்த இலவச மருத்துவமனையைக் கட்டியுள்ளான்! 
 
இரண்டு டாக்டர்... இரண்டு நர்ஸ் போதும்.
 
அதற்கான நேர்முகத் தேர்வு பத்து மணிக்கு உள்ளது!
 
அதற்குள் பண்ணையையும்... அங்குள்ள மக்களையும் பார்த்து வர... பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான், அர்ஜுன். 
 
அர்ஜுன் அங்குள்ள மக்களுக்கு இறைவன்... தேவ தூதன் என்றே சொல்லலாம்! 
 
இயற்கை விரும்பி! இயற்கையை உயிராய் நேசிக்கிறான்! 
 
செயற்கை அவனுக்கு எதிரி!
 
இயற்கை உரங்களைப் பயன்படுத்தி... இயற்கை வேளாண்மை செய்து கொண்டிருக்கிறான்! 
 
ஒரு துளி இரசாயன விஷம் கலக்காமல்... மண் அங்கே புது ஜனனம் எடுத்துக் கன்னி கழியாத நிலமாய்க் காட்சியளிக்கிறது! 
 
அந்தப் பகுதி மக்களையும்... பிறகு விழுப்புரம் மாவட்டம் முழுவதையும் மாற்றியவன்... வெறியோடு சேலம், கடலூர் மாவட்டத்தையும் முற்றிலுமாய் இயற்கை வேளாண்மைக்கு மாற்றியுள்ளான்! 
 
மற்ற மாவட்டங்களையும் மாற்றுவதற்காகத் தீவிரமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்! 
Disponibile da: 07/02/2024.
Lunghezza di stampa: 224 pagine.

Altri libri che potrebbero interessarti

  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Mostra libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Mostra libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Mostra libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro