Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
பனி வடியும் பூக்கள் - cover

பனி வடியும் பூக்கள்

ஆர்.மகேஸ்வரி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

இதோபாரு... பூங்கோதை... இப்ப காயத்திரி இருக்கிற நிலமையில அவ மனசை புண்படுத்தாம நடந்துக்கிறதுதான் நியாயம். மனிதாபிமானம். அவ அம்மா வீட்ல கொண்டுபோய் விட்டோம்னா என்ன நினைப்பா. காயத்திரி படிச்சப்பொண்ணு. டாக்டரும்கூட. ஏன் எதுக்குன்னு புரிஞ்சுக்கமாட்டாளா?”“என் மனசை யாரும் புரிஞ்சுக்கமாட்டீங்களா?”“இப்ப உன்னைவிட நோயாளியோட மனசும், உடம்பும்தான் முக்கியம். நீ வேணுமின்னா ஒரு சுற்றுலா போய் வாயேன். ரொம்ப நாளா ஆசைப்பட்டுக்கிட்டு இருந்தியே.”பூங்கோதை பதில் பேசாமல் அங்கிருந்து எழுந்துச் சென்றாள். கோபமாய் இருக்கிறாள் என்று புரிந்தது.“அம்மா...”“விடு முகுந்தா! நியாயமான கோபம்னா சமாதானப்படுத்தலாம். அவளை நான் பார்த்துக்கிறேன். நீ போய் காயத்திரியைப் பாரு. அ... ஒரு நிமிடம்...”“என்னப்பா?”“சாப்பிட்டியா?”“பசிக்கலேப்பா...”“நீயும், ரெண்டு நாளா எதுவும் சாப்பிடலையே முகுந்தா? உனக்கும் உடம்பெங்கும் அடிபட்டிருக்கு. சாப்பிடுப்பா... நான் போய் கேன்டீன்ல ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”“வேணாம்ப்பா... நானே சாப்பிட்டுக்கிறேன்.”“சரி... நீ போ... நான் அந்த பைத்தியக்காரியை சமாதானப்படுத்திட்டு வர்றேன்” என்றவர், மனைவி பூங்கோதையை நோக்கி நடந்தார்.முகுந்தன் மெல்ல கதவை திறந்துப் பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் காயத்திரி.அவளைத் தொந்தரவு செய்ய மனமின்றி டாக்டரின் அறையை நோக்கி நடந்தான்.கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.“வா... முகுந்த்!”“பிசியா இருக்கியா, தொந்திரவுப் பண்ணிட்டேனா?”“ஊகூம்... இது எனக்கு ஓய்வெடுக்கிற நேரம்தான். உட்காரு...!” என்ற டாக்டர் விக்ரம், முகுந்தனின் நெருங்கிய நண்பன்தான்.“மறுபடி சொல்றேனேன்னு தப்பா நினைக்காதே விக்ரம். இந்த விபத்து போலீஸ் வழக்கு ஆகாம பார்த்துக்கறது உன்னோட பொறுப்பு!”“புரியுதுடா! நியாயப்படி... போலீசாருக்கு தகவல் இல்லாம நான் சிகிச்சை தந்திருக்கக்கூடாது. ஆனா, தந்தேன். யாருக்காக? உனக்காக... உன் நட்புக்காக. ஆனா, காயத்திரி கண் முழிச்சதும் கேட்ட முதல் கேள்வியே ‘போலீஸ் யாரும் வரலையா?’ன்னுதான். ‘இல்லே... தகவல் தெரிவிக்கலே’ன்னு சொன்னேன்!”“அவ ஏதோ பயத்துல கேட்டிருக்கா. அப்பாவை சமாளிக்கிறது தான் பெரும்பாடா போச்சு.”“நீதிபதியா இருந்தவராச்சே...”“சரி... நான் அப்புறமா வந்து பார்க்கிறேன். நீயும் ஓய்வு எடு!”மறுபடி காயத்திரியின் அறைக்குச் சென்றான். நர்ஸ் ஒருத்தி அவள் கையில் ஏறிக்கொண்டிருந்த ‘டிரிப்’ஸின் டியூபைத் திறந்து ஊசி- மருந்தை செலுத்தினாள்.நரம்பில் கடுகடுத்ததுப்போலும்... உறக்கத்திலேயே முகம் சுருக்கினாள், காயத்திரி.நர்ஸ் வெளியேறினாள்.சத்தம் போடாமல் நாற்காலியை கட்டிலுக்கு அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்இதற்குமுன் அவள் முகத்தில் சின்ன வருத்தத்தைக்கூட பார்த்ததில்லை. ஆனால், எப்பேர்ப்பட்ட பேரிடி நேர்ந்து விட்டது?அவளின் உறக்கம் கலையாமல் மிக கவனமாக டிரிப்ஸ் ஏற்றப்படாத வலக்கரத்தின் மீது தன் கன்னத்தை வைத்து மென்மையாய் அழுத்தினான்.கண்கள் அவன் அனுமதியின்றி கரகரவென வழிந்தது
Available since: 01/13/2024.
Print length: 86 pages.

Other books that might interest you

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book