Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
என்னை தாலாட்டும் சங்கீதமே - cover

என்னை தாலாட்டும் சங்கீதமே

ஆர்.மகேஸ்வரி

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

அன்பு... அளவிட முடியாத சக்தியும் பெரும் வலிமையும் வாய்ந்தது.
 
அந்த அன்பால் எப்பேர்பட்ட மலையளவு குணக் கேடனைக் கூட... மடுவளவாய் ஆக்கிவிட முடியும்! அன்புக்கு அடிமையாகாதோர் இவ்வுலகில் யாருமே இருக்கமாட்டார்கள்! அத்தகைய அன்பு நம்மிடையே மலையளவு குவிந்து கிடக்கிறது. நெஞ்சில் அள்ள அள்ளக் குறையாதது, அன்பு மட்டுமே! அந்த அன்பை பிறருக்கு வாரி வழங்குவதில் தயக்கம் காட்டக்கூடாது! தாராளமாய் அன்பை அனைவரிடத்திலும் விதைக்க வேண்டும்! அப்போதுதான் மீண்டும் அதே அன்பை ஆனந்தமாய் அறுவடை செய்ய முடியும்!
 
அன்பு காட்டக்கூடத் தெரிய வேண்டும்! அன்பு காட்டுவது கூட ஒரு கலைதான்! அந்தக் கலையை அறிந்தவர்களை மக்கள் சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம்!
 
அன்பை பகைவர்களிடமும் கூட செலுத்த வேண்டும்! இவ்வாறு பகைவரிடமும் அன்பு செலுத்த... நாட்டில் பகைமையும், பழி உணர்ச்சியும், வன்முறையும், தீவிரவாதமும் அடியோடு அழிந்து விடும்!
 
'அன்பில்லாதவர்களிடம் சுயநலத்தை மட்டுமே காணலாம்!'
 
'அன்புடையவர்களிடம் பிறர் நலம் ஓங்கி, உயர்ந்து வளர்ந்திருக்கும்!'
 
அப்பாகூட சுயநலவாதிதான்! அவளுக்குத் தெரிந்து அன்பாய், பாசமாய் பேசியதில்லை! இழுத்து வைத்து கொஞ்சியதில்லை!
 
அவருடைய வார்த்தைகளில் மென்மை இருக்காது! அதிகாரத்தோடும், கட்டளையாயும்தான் பேசுவார்!
 
அக்கா திவ்யா அப்பாவை எதிர்த்து இதுவரைப் பேசியதே இல்லை. மானசாவும் அப்படித்தான் இருந்தாள். படிப்பு விஷயத்தில் மட்டும்... அவரிடம் பணிந்து போகப் பிடிக்கவில்லை!
 
மானசா தந்தையிடம் பேசுவதேயில்லை!
 
முகம் வாடி அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். உடல் மெலிந்து போனாள்!
 
சிவசங்கரனின் கண்ணிலும், கருத்திலும் மானசாவின் கோலம் பட்டது. அவருக்குக் கூட இது கஷ்டமாய் இருந்தது.
 
ஒரு மாதம் கடந்து... ஒருநாள்...
 
மானசாவை அருகில் அழைத்துப் பேசினார்.
 
"மானு... படிச்சி என்னம்மா செய்யப்போறே?" என்று மெதுவாய் பாசத்தோடு கேட்க... சட்டென்று கண்கள் பொத்துக் கொண்டது.
 
“அத்தானை படிக்க வைத்தீர்கள்! அக்காவை படிக்க வைத்தீர்கள்! எனக்கு மட்டும் முதுகலைப் படிப்பு மறுக்கப்படுவதேன்? ஒரு கண்ணுல வெண்ணெய்யும், மறு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கலாமா?"
 
“மானு... அப்போ நாமெல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டு இருந்தோம்! படிச்சால் உதவுமேன்னு அவர்களைப் படிக்க வைத்தேன்! இன்றைக்கு அவர்கள் நிறைய சம்பாதிக்கிறாங்க! எக்கச்சக்கமான பணம் இருக்கு! நல்ல பையனாய் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்! நிறைய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரேன்! கட்டிட்டுப் போய் சந்தோசமா குடும்பம் நடத்து!"
 
“அப்பா... ப்ளீஸ்ப்பா... இது ஒன்றுக்கு மட்டும் அனுமதியுங்க! படிச்சி முடித்ததும்... நீங்க கை காட்டற மாப்பிள்ளையை மறுபேச்சே பேசாமல் கட்டிட்டுப் போய் குடும்பம் நடத்தறேன்!”
 
“நான் படிக்கணும்ப்பா!” என்று அழுதவளை கண்ட சிவசங்கரனுக்குக் கொஞ்சம் கஷ்டமாய் போய்விட்டது.
 
அவரின் திடத்தை மகளின் பிடிவாதம் வெல்ல...
 
"கல்லூரி திறந்து ஒரு மாதம் ஆகிறது. அட்மிஷன் முடிந்திருக்குமே மானு! என்ன செய்யலாம்?”
 
அப்பா கேட்க... மானசா சந்தோசமானாள்.
 
"ப்ளீஸ்ப்பா... எங்காவது எனக்காக ஒரு இடம் இல்லாமல் போகாது!"
 
“சரி முயற்சிக்கலாம்! போ... போய் நல்லா சாப்பிடு! சந்தோசமாய் இரு!” 
 
'அப்பாவா இப்படிப் பேசுகிறார்' என்று மானசா அதிசயப்பட்டாள்.
 
இந்த நல்ல செய்தியைச் சொல்ல... தாயையும், அத்தையையும் தேடி ஓடினாள்.
Disponibile da: 07/02/2024.
Lunghezza di stampa: 156 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Mostra libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Mostra libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Mostra libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Mostra libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro