Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
விழியிலே மலர்ந்தது - cover

விழியிலே மலர்ந்தது

ஆர்.சுமதி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

“அண்ணே...”தாடை முழுவதும் நுரை வெண்தாடி போல் சிரிக்க ஷேவ் செய்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் வசந்தன் வந்து நிற்பதை உணர்ந்து “ம்...” என்றான்.வசந்தன் இடது கையால் கேசத்தை சரி செய்தவாறே தயக்கமாக கேட்டான்.“அண்ணே... ஒரு இருபது ரூபா பணம் வேணும்.”கண்ணாடியில் இருந்த பார்வையை எடுத்து வசந்தன் மேல் போட்டான் கார்த்திகேயன்.அண்ணனுடைய பார்வையை சந்தித்ததும் வசந்தனின் தலை கல்யாண பெண்ணைப் போல சட்டென்று கவிழ்ந்தது.“எதுக்குப் பணம்?”“இன்னைக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு. போகணும்.”குரல் ரப்பராக இருந்தது.“நீயும்ன் எத்தனை. இன்டர்வியூவிற்கு போவே? எதிலேயாவது செலக்ட் ஆகியிருக்கியா? உனக்கு பஸ்ஸுக்கு நான் கொடுத்த பணத்துல உருப்படியாக ஏதாவது வாங்கியிருந்தா கூட உபயோகமாக இருக்கும். உனக்கு அழிச்சதெல்லாம் வேஸ்ட்.”கார்த்திகேயனின் முகத்தில் கடுமை நிலவியது.“அண்ணே... இந்த தடவை எனக்கு எப்படியும் வேலை கிடைக்கும். நம்பிக்கை இருக்கு.”“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்ன நம்பிக்கையோ என்ன இழவோ?” என்றவன் உள் நோக்கி குரல் கொடுத்தான்“ரேவதி... ஏய் ரேவதி.”ரேவதி உள்ளிருந்து வந்தாள். கார்த்திகேயனின் மனைவி.“அயர்ன் பண்ணி கொடுக்கச் சொன்னீங்க. சட்டையை அயர்ன் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்குள்ளே ரேவதிக்கு என்ன வேலை வச்சிருக்கீங்க?” என எரிச்சலுடன் கேட்டாள்.“ஒரு வேலையும் இல்லை. என் பேண்ட் பாக்கெட்ல இருபது ரூபா பணம் எடுத்து இவன்கிட்ட கொடு.”“ஏன்? எதுக்கு பணம்?” கேள்வியே மிகவும் கடுமையாக வந்தது. பார்வை வசந்தனை தாக்கியது.வசந்தனின் தலை மறுபடியும் கவிழ்ந்தது.“இன்டர்வியூவுக்குப் போறானாம்.”லைப் பாதையை“ஆமா! போனாலும் வேலையை தூக்கி கையில கொடுத்துடப் போறாங்க தண்டச் செலவு.”“சரி... சரி. குடு.”அண்ணி ரேவதி முறைப்புடன் சென்று எரிச்சலுடன் எடுத்து வந்து வசந்தனின் கையில் திணித்துவிட்டு நின்றாள்.பணத்தை வாங்கிக் கொண்ட வசந்தன் அறையை விட்டு வெளியே வந்ததும் உள்ளே ரேவதியின் குரல் எரிச்சலுடன் தொடர்ந்தது.“இதப் பாருங்க... இந்த மாதிரி வெட்டி செலவு செய்யறதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை.”“என்ன பண்ணச் சொல்றே. செய்ய வேண்டிய செலவையெல்லாம் செய்து தானே ஆகணும்.”“நல்லா செய்தீங்க. போடற சோறுதான் தண்டம்ன்னா இதுங்களுக்கு செலவுக்கு வேற கொட்டி அழணும். உங்க அம்மாவுக்கும் உங்க தம்பிக்கும் செய்யற செலவை சேர்த்துவச்சா நம்ம புள்ளைங்களுக்கு உதவும். இதப்பாருங்க. இதுவரைக்கும் செய்த செலவு போதும். உங்க தம்பியை ஒரு வேலையை தேடிக்கிட்டு உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு போகச் சொல்லுங்க. நமக்கும் புள்ளையும் குட்டியுமா ஆயிடுச்சு. இனியும் நாம அனாவசிய செலவையெல்லாம் செய்துகிட்டு இருக்கக்கூடாது. உங்க தம்பிக்கு வேலை கிடைச்சதும் உங்கம்மாஇங்க இருக்கக்கூடாது. ஆமாம் சொல்லிட்டேன்.” ரேவதியின் பேச்சுக்கு கார்த்திகேயன் அடங்கிப் போனான்.கேட்டுக் கொண்டிருந்த வசந்தனுக்கு ரத்தம் கொதித்தது. பெற்ற தாய்க்கு சோறு போடுவதை பாரமாக நினைக்கும் மனிதர்களைக் கண்டு வேதனை பெருகியது.
Disponible depuis: 14/02/2024.
Longueur d'impression: 106 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre