Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
வெண்ணிலா நேரத்திலே! - cover

வெண்ணிலா நேரத்திலே!

ஆர்.சுமதி

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

குண்டு பூசணிக்காயாக உடலைப் பெருக்க விட்டிருந்த தையல்நாயகி பிருந்தாவுடன் ஓட முடியாமல் மூச்சிரைத்தாள்.இருவரும் வழியில் இருந்த மளிகைக் கடை ஒன்றில் நின்றனர்.கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை.முதலாளியின் இடத்தில அமர்ந்திருந்தான் ஆதி. வாடிக்கையாளர் ஒருவர் நீட்டிய பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டிருந்தான் ஆதி.“உன் மாமனைப் பாரு. கடைக்கே முதலாளி மாதிரி உட்கார்ந்திருக்கு.” என்றாள் தையல்நாயகி.“ஒரு நாளைக்கு சொந்தமா கடை வச்சு முதலாளியா உட்காரமலா போகப்போகுது...” என்று விட்டுக் கொடுக்காமல் சொன்னாள் பிருந்தா.ஆதி அவர்களைப் பார்த்துவிட்டான்.“மாமா...இந்தா டிபன். அம்மா கொடுத்துது...”“நீ எதுக்கு எடுத்துட்டு வந்தே? நான் வந்து சாப்பிட்டுக்க மாட்டேனா? உனக்கு ஸ்கூலுக்கு நாழியாகலையா? கடைக்கெல்லாம் வந்துக்கிட்டு...” வேளை செய்யும் விடலைப் பையன்கள் பொட்டலம் மடிப்பதை விட்டுவிட்டு பிருந்தாவைப் பார்ப்பதை கவனித்த ஆதி அவளை சற்றே அவஸ்தையாகப் பார்த்தான்.“ம்...உனக்குப் புரியுது. என் அம்மாவுக்குப் புரியலையே...” என முணுமுணுத்துவிட்டு தையல்நாயகியுடன் சென்றாள் முதுகு திருப்பியபடி.அவர்கள் அகன்றதும் மீதி சில்லறையை வாடிக்கையாளருக்கு கொடுக்க கல்லாவில் குனிந்தவனிடம் பணம் கொடுத்த அந்த நடுத்தர மனிதர் குறும்பாகக் கேட்டார்.“என்னப்பா ஆதி? அக்கா மக அக்கறையா டிபன் கொடுத்துட்டுப் போறா? என்னா விஷயம்?”வெட்கப்பட்ட ஆதி சிரித்தான்.“அக்கா கொடுத்துவிட்டிருக்கு. பாவம் பள்ளிக்கூடம் போற நேரத்துல அதுக்கு வேலை.”“அப்ப உன் மேல அக்காவுக்குத்தான் அக்கறை. இவளுக்கு இல்லைன்னு சொல்றே?”“அப்படியில்லீங்க.”“அப்ப இவளுக்கு மாமன் மேல அக்கறை இருக்குன்னு சொல்லு. கட்டிக்கப் போறவளுக்கு அக்கறை இல்லமாயிருக்குமா?”தீயை தொட்டதைப் போல் பதறினான்.“ஐய்யோ...நீங்க வேற?”“என்ன தப்பா சொல்லிட்டேன்? அவ உனக்கு மொறைப் பொண்ணுதானே?”“மொறைப் பொண்ணுதான். ஆனா...குமாருக்கு கட்டறதாத்தான் பேச்சு.”“அந்த ஒட்டடைக்குச்சிப் பயலுக்கா? இவதான் உன் பொறுமைக்கும் குணத்துக்கும் பொருத்தமாயிருப்பா!” இப்பொழுது ஆதியின் முகத்தில் ஒரு கிளர்ச்சி படர்ந்து மறைவதை அவர் மட்டுமல்ல வேலைக்கிடையே ஜாடையாக கடைப் பையன்களும் பார்த்துச் சிரித்தனர்.“குமார் காலேஜ்ல படிக்கிறான். அவனுக்கு சமமாயிருக்கணும்னுதான் அக்கா அவளைப் படிக்க வைக்குது.”“இருக்கட்டுமே...படிச்ச பொண்ணு படிக்காதவனைக் கட்டிக்கிட்ட கதையெல்லாம் உலகத்துல இல்லையா?”“அதுக்கில்லை. குமாருக்குத்தான் பிருந்தா வயசுப் பொருத்தம் சரியாயிருக்கும். எனக்கும் அதுக்கும் ரொம்ப வயசு வித்தியாசம்.”“என்ன பெரிய வயசு வித்தியாசம்? உங்க அக்காவை பதினாறு வயசுல முப்பத்தஞ்சு வயசு அத்தானுக்கு அதுவும் ரெண்டதாரமா கட்டிக் கொடுக்கலையா? அவங்க சந்தேகத்துக்குத்தான் முதல் உரிமை. குமாருக்குன்னு பேச்சுத்தானே? வார்த்தையெல்லாம் வாழ்க்கையாகிடுமா ? விட்டுக் கொடுத்துட்டு உட்கார்திருக்காதே! பிரிந்தசூட்டிகையான பொண்ணு அவளைக் கட்டிக்கிட்டா நீ இப்படி இனொருத்தன்கிட்டே வேலை பார்க்கிற நிலை இருக்காது உன்னை ஒரு கடைக்கே முதலாளியா ஆக்கிடுவா.”“இந்தாங்க”கடைப் பையன் நீட்டிய பொட்டலத்தை வாங்கிக் கொண்டு அதி மனதில் பொறியை கிளப்பிவிட்டுவிட்டு போய்விட்டார் வாடிக்கையாளர்.வேடிக்கையாகப் பேசினார் என எடுத்துக் கொள்வதா உண்மையாக எடுத்துக் கொள்வதா என ஒரு கணம் தடுமாறினான் ஆதி.அந்த வார்த்தைகள் அரியாசனம் போட்டு அமர்ந்து விட்டது அத்தியின் மனதில்.“ஏய்... பிருந்தா உங்கம்மா முருகேசன் வீட்ல குமாரை பார்த்து வீட்டுக்கு சாப்பிட வரச் சொல்லிட்டுப் போன்னு சொன்னாங்களே மறந்துட்டியா?”ஓட்டமும் நடையுமாக முன்னால் சென்று கொண்டிருந்த பிருந்தாவின் பின்னாலயே நடந்த தையல் ஞாயபகப்படுத்தினால்.“வேற வேலை இல்லை. சாப்பாடு கொடுக்கறதும். சாப்பிடாதவங்களையெல்லாம் கண்டுபிடிச்சு சாப்பிடவாங்கன்னு சொல்றதுதும்தான் எனக்கு வேலையா? ஏற்கனவே லேட்டாயிண்ட்டுன்னு நானே பயந்துகிட்டு ஓடறேன்.”“பாவம்டி குமார்.”“ம்... அவ்வளவு அக்கறையிருந்தா நீ போய் சொல்லிட்டு வா. அதுவரைக்கும் உனக்காக பஸ் காத்துக்கிட்டிருக்கும்.”“அடப்பாவி என்னடி இப்படி சொல்றே?”பிருந்தா கடுப்படிக்க தையல் மௌனமானாள்.இருவரும் பேருந்து நிறுத்தத்தை நெருங்கினர்
Disponibile da: 14/02/2024.
Lunghezza di stampa: 93 pagine.

Altri libri che potrebbero interessarti

  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Mostra libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Mostra libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Mostra libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Mostra libro