Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
பொன்னாடை - cover

பொன்னாடை

ஆர்.சுமதி

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

அந்த பெரிய பங்களாவின் முன்னால் காரை நிறுத்தினான் வைதேகியின் டிரைவர்.“டிரைவர்...”“சொல்லுங்கம்மா...”“காரை விக்க ஏற்பாடு பண்ணிடு.”“அம்மா, கொஞ்சம் யோசனை பண்ணி செய்ங்கம்மா.”“என்ன யோசனை பண்ணச் சொல்றே?”“அம்மா இது வாரிசு இல்லாத சொத்து இல்லை. வாணியம்மா என்னைக்காவது ஒரு நாளைக்கு உங்களைத் தேடி வருவாங்க.”“அவ வரமாட்டா.”“அம்மா... அப்படி சொல்லாதீங்க. வாணியம்மா மட்டும் இல்லை ஐயாவும் வருவாங்க. உறவுகள் என்னைக்கும் உடைஞ்சுடாது. அப்ப வந்து சொத்துக்களை ஏன் வித்தீங்கன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? அம்மா பாசம்கிறது அத்தனை சீக்கிரத்துல விட்டுப் போகாதும்மா. அந்த சக்தி என்னைக்கும் ஜெயிக்கும். வாணியம்மா வருவாங்க. உங்கக்கூட இருப்பாங்க. அவங்க அனுபவிக்க வேண்டிய சொத்துக்களை இப்படி அனாதைப் பசங்களுக்கு எழுதி வைக்காதீங்கம்மா...”“ம்... நீ சொல்றதெல்லாம் எதுவும் நடக்காது. எனக்கு நல்லாத் தெரியும். என் கணவரும், என் மகளும் திரும்ப என்கிட்ட வரமாட்டாங்க. அதுல எந்த மாற்றமும் இல்லை. ஏன்னா... நான் பண்ணின பாவம் அப்படி. அந்த பாவத்துக்கு பரிகாரமா நான் என் சொத்தையெல்லாம் தானம் பண்ணலை. என் கணவருக்கு நான் செய்யற நன்றி இதுதான். இதெல்லாம் அவர் சம்பாதித்த சொத்து. அவர் வந்து இதை அனுபவிக்கபோறதில்லைங்கிறது உறுதி. அவரோட பொண்ணுங்களும் அவரை மாதிரிதான். உயிரே போனாலும் வைராக்கியத்திலிருந்து மாறமாட்டாங்க. ரெண்டு பேருமே அதை நிரூபிச்சிட்டாளுங்க. ப்ச்! பேசி எதுவும் ஆகப் போறதில்லை. சொன்னதை செய்.”சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். தனிமை வெறுமை அவளை எள்ளி நகையாடியது. சோர்வுடன் வந்து சோபாவில் சரிந்தாள்.வாணியும் சரளாவும் காற்சதங்கை ஒலிக்க அந்த வீடு பூராவும் ஓடி விளையாடிய காட்சி கண்களில் தெரிந்தது.அம்மா, அம்மா என அழைத்த அவர்களுடைய குரல் காதில் ஒலித்தது.இப்பொழுது, வீடு சுடுகாடு போல் ஒரு அமைதியில் இருந்தது. ஒரு பேச்சுக்குரல் இல்லை. அவள் மட்டுமே தன்னந்தனியாக பேய் போல் உலவிக் கொண்டிருக்கிறாள். கண்ணீர் திரண்டது. சுவரில் பெரிதாக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் அவளுடைய விழிகள் நிலைத்தது.இளம் வயது வைதேகியும் சேகரும் சரளாவையும்,. வாணியையும் அணைத்தபடி இருந்தனர். சிரிப்பு அனைவரின் முகத்திலும் குடி கொண்டிருந்தது.மகிழ்ச்சி பூத்துக்குலுங்கியது அந்த புகைப்படத்தில். அவளுடைய நெஞ்சம் வேதனையில் வாடியது. விம்மியது. அவள் குலுங்கியபொழுதே அதே நேரம் தொலைபேசி ஒலித்தது.முந்தானையால் கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.“ஹலோ... வைதேகி பேசறேன், நீங்க யாரு?”“மேடம், நான் கோபால்சாமி பேசறேன்.”“சொல்லுங்க.”“சொத்துக்களை விக்க ஏற்பாடு பண்ணச் சொல்லியிருந்தீங்களே! நல்ல பார்ட்டி ஒண்ணு வந்திருக்கு. அழைச்சுட்டு வரட்டுமா மேடம்.சரி. எப்ப வர்றீங்க?”“சாயந்தரம் அஞ்சு மணிக்கு வர்றோம்.”“சரி.” வைத்துவிட்டு வந்தாள்.அவள் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த வீடு இன்னொரு கைக்குப் போகப் போகிறது. ரசித்து ரசித்து பராமரித்த தோட்டம் விலைக்குப் போகப் போகிறது. அமுத சுரபியால் விளைந்த வயல்கள் அடுத்தவர் கைக்குப் போகப் போகிறது.நெஞ்சில் பொங்கிய வேதனை அலைகளை கட்டுப்படுத்த தெரியாமல் திண்டாடினாள்.கோபால்சாமி சொன்னபடியே மாலை, சொத்துக்களை வாங்க ஆள் அழைத்து வந்தார்.வீடு விலை பேசப்பட்டது. வந்தவர் பெரும் பணக்காரர். அவரே நிலங்களையும் விலைக்கு வாங்கத் தயாராக இருந்தார்.பேசிமுடிக்கப்பட்டது. பத்திரம் எழுதவும் பணம் கொடுக்கவும் தேதி குறிக்கப்பட்டது.வந்தவர் திருப்தியாக எழுந்து சென்றார்.அவர் சென்றபின் வைதேகி எழுந்தாள்.மனம் அழுதது.இரவு உணவு இறங்கவில்லை.படுக்கையில் புரண்டாள்.இந்த சொத்துக்களுக்காகத்தானே எல்லா உறவுகளையும் இழந்தாய். இன்று சொத்துக்களை அனாதைகளுக்கு எழுதி வைக்க முன் வந்திருக்கிறாய்.மனசாட்சி அவளை கேள்வி கேட்க அவளுடைய மனத்திரையில் கடந்த காலம் விரிந்தது
Disponibile da: 14/02/2024.
Lunghezza di stampa: 78 pagine.

Altri libri che potrebbero interessarti

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Mostra libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Mostra libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Mostra libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro