Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
மறவாதே மனமே! - cover

மறவாதே மனமே!

ஆர்.சுமதி

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

பார்வதியும், அம்சா மாமியும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.“பார்வதி... என்னடி இது, உன் புள்ளையாண்டான் ஒரு குட்டியோடு வர்றான். என்ன அசிங்கம்!”பார்வதிக்கும் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது போல் இருந்தது. ஆனால், மாமி எதிரே மானம் போகாமல் பார்த்துக் கொள்ள அவள் தவித்தாள்.“என்ன மாமி... அசிங்கம் அது இதுன்னுகிட்டு! தன்கூட வேலை பார்க்கிற பொண்ணா இருக்கலாம். இப்ப ஆம்பளையும் பொம்பளையும் சகஜமா பழகுதுங்களே?”“அதுக்கு இப்படி ஒட்டி உரசிக்கிட்டா போவாங்க? அந்தப் பொண்ணு உன் பையன் இடுப்பை என்னமா உடும்புப் பிடியா புடிச்சுக்கிட்டு வண்டியில் உட்கார்ந்திருந்தா... அருமை பெருமையா ஒண்ணு பெத்து அதையும் இப்படி விட்டுட்டியேடி! அவள் என்ன சாதியோ... குலமோ? கடவுளே...”பார்வதியால் எதுவும் பேச முடியவில்லை. அவளுக்கு அடிவயிறு கலங்கியது.“இந்தக் காலத்துல நடையா நடந்து நாம தேடி கட்டி வச்சதுங்களே உள்ளே வந்த ரெண்டு நாளில் நம்மை எந்த ஊருன்னு கேட்குதுங்க. இப்படி தானாக வர்றதுங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கணவனை கைக்குள் போட்டுக்கிட்டு நம்மை ஒருவழி பண்ணிடும். ஆரம்பத்திலேயே நாம எச்சரிக்கையா இருக்கிறது நல்லது.”“என்ன மாமி நீங்க? என்னமோ கல்யாணமே நடந்துட்ட மாதிரி பேசுறீங்க? நான் நடக்க விட்டுடுவேனா? சாதி, மதம், ஜாதகம் இதெல்லாம் பார்த்துதான் என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணுவேன். நான் பார்க்கிற பொண்ணுதான் என் வீட்டுக்கு மருமகளாக வரணும்.”“அதை, உன் புள்ளையாண்டான் கேட்கணுமே!”“கேட்காம எங்க போவான்? அவன் எனக்குப் பயந்தவன்.”“காதல் வந்துட்டா, இந்தக் காலத்துல பயமாவது... கத்திரிக்காயாவது? இதோ பாரு... வீட்டுக்குப் போனதும் தடாலடியா அவனைப் பிடிச்சு கத்தாதே. மெதுவா கல்யாண பேச்சை எடு. அவனாக சொல்லட்டும். அப்புறம் ஒரு பிடி பிடி” மாமி திட்டம் போட்டுக் கொடுத்தாள்.இருவரும் தங்கள் வீட்டுக்கு வந்தனர். தனது அம்சா மாமி, பார்வதியின் பக்கத்து வீட்டுக்காரி.பார்வதி, வீட்டுக்குள் நுழையும் போது, முற்றத்தைப் பார்த்தாள். கேசவனின் “பைக்” இல்லை.‘அவன் எங்கே போனான்? அவளை எங்கே இறக்கி விட்டான்?’உள்ளே வந்தாள்.திண்ணையில் அமர்ந்திருந்தார், கணவர் முருகேசன். அவர் கையில் செய்தித்தாள்.“என்னங்க... உங்க அருமை பையன் வந்தானா?” கேட்டவாறு, அருகில் அமர்ந்தாள்.“வந்தான்... யாரோ நண்பனைப் பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு, உள்ளேகூட வராம அப்படியே போயிட்டான்.”“இன்னைக்கு என்ன காரியம் நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?”“என்ன நடந்தது? நீ கோவிலுக்கு போயிட்டு வர்றே. அவ்வளவுதானே?”“அதுமட்டுமில்லை” என்று இழுத்தவள், வழியில் தான் கண்ட காட்சியைச் சொன்னாள்.“கொடுத்து வச்சவன். அந்தக் காலத்துல எதிரே வர்ற பொண்ணை நிமிர்ந்து பார்க்கவே எனக்கு தொடை நடுங்கும்.”“என்ன... கிண்டலா?”“கிண்டல் இல்லை. இப்போ என்ன பண்ணுறது? அவன் இஷ்டப்பட்ட பொண்ணையே கட்டிவச்சுட்டா போச்சு.”“போதும்... நீங்க ஒருத்தரே போதும். இந்தக் குடும்பம் உருப்பட்ட மாதிரிதான்.கணவனோடு அவள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேசவன், வண்டியில் வந்து இறங்கினான். உற்சாகமாக அவன் பெற்றோரை நோக்கி வரவும், ஆத்திரத்தில் கொதித்தாள், அம்மா.அவன், அதை சட்டை செய்யவில்லை.“அம்மா! பசிக்குது” என்றான்.“இப்போ என்னால் டிபனெல்லாம் பண்ண முடியாது. காப்பி வேணா போட்டுத் தர்றேன்.”“காப்பி வேண்டாம்! வர்ற வழியில என் சகாவோடு காப்பி குடிச்சுட்டேன்.”‘ஆம்பளை சகாவா? பொம்பளை சகாவா?’ அவசரமாகக் கேட்பதற்கு அம்மாவுக்கு நாக்கு துடித்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள்.“அவன்தான் பசிக்குதுங்கிறானே... ஏதாவது பண்ணிக் கொடேன்” என்றபடி முருகேசன் உள்ளே வந்தார்.பார்வதி கோபமாக சமையலறைக்குள் நுழைந்தாள். எரிச்சலோடு, பாத்திரங்களை போட்டு உருட்டினாள்.“அம்மாவுக்கு என்னாச்சு? கோபமாக இருக்கிற மாதிரி தெரியுது?” அப்பாவைப் பார்த்து கேட்டபடியே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான், கேசவன்.“கொஞ்ச நேரத்துல தெரியும்... நீயே பாரு” என்றபடி அவரும் தொலைக்காட்சியில் ஆழ்ந்தார்.சில நிமிடங்களில் சூடாக ரவா உப்புமாவுடன் வந்தாள், பார்வதி. ‘டங்’கென மகன் எதிரே வைத்தாள். அவன் சாப்பிடத் தொடங்க, அம்மா இங்கும் அங்கும் உலவினாள்.‘முதலில் கல்யாண பேசசை எடு’ என அம்சா மாமி சொன்னது மறந்து போனது.அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தவளைப் போல் இருந்துவிட்டு திடீரென கத்தத் தொடங்கினாள்.“ஏன்டா... உன் இடுப்பைப் புடிச்சுக்கிட்டு வண்டியில் ஒருத்தி வந்தாளே... அவ யாருடா?”அதிரடியாக அம்மா இப்படிக் கேட்பாள் என்பதை எதிர்பார்க்காத கேசவன், ஒரு கணம் ஆடித்தான் போனான்
Disponibile da: 14/02/2024.
Lunghezza di stampa: 84 pagine.

Altri libri che potrebbero interessarti

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Mostra libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Mostra libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Mostra libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Mostra libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Mostra libro