Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
மலரே மயங்காதே! - cover

மலரே மயங்காதே!

ஆர்.சுமதி

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

கைகள் இரண்டையும் தாமரை மொட்டாக்கி, நந்தனின் எதிரே குவித்தாள், தமிழ்.தாமரை மொட்டின் மீது பனித்துளி விழுந்து சிதறியதைப் போல், அவளுடைய கண்ணீர்த் துளி, கையில் விழுந்து சிதறியது.“நன்றி... எங்க அப்பாவைச் சரியான நேரத்துக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரைக் காப்பாத்திட்டீங்க! உங்களுக்குக் கோடி நன்றி சொன்னாலும் நீங்க செய்த உதவிக்கு ஈடாகாது.”நந்தன் சற்றே சங்கோஜப்பட்டான்.‘‘ஐயோ.. என்ன மேடம், நீங்க வேற..! மனிதனுக்கு மனிதன் இந்த உதவி செய்யலைன்னா எப்படி?”“நீங்க செய்த உதவியைச் சாதாரணமா எடுத்துக்கிறது உங்களுக்குப் பெருந்தன்மையா இருக்கலாம், ஆனா, எனக்கு எங்க அப்பாவைக் காப்பாத்தின தெய்வமா நீங்க தெரியுறீங்க.’’“இல்லை... எப்போதெல்லாம் பிறருக்கு உதவி செய்ய நேரம் வாய்க்குதோ, அப்போதெல்லாம் உதவி செய்திடணும். அப்பத்தான், மனித வாழ்க்கை நிறைவா இருக்கும்.”“உங்க செயல் மட்டுமில்லை, பேச்சும் மனதைத் தொடுகிற மாதிரி இருக்கு, மிஸ்டர்...’’‘‘நந்தன்.’’அவளுடைய முகத்தில் அப்பா ஏற்படுத்திய கலக்கம் மறைந்து முதன் முறையாக அழகான புன்னகை மலர்ந்தது.‘‘நந்தன், உங்களுக்குப் பொருத்தமான பெயர்தான். ஆபத்துல துடிக்கிற உயிரைக் காக்கிற பகவானுடைய திருநாமம். அந்தக் கிருஷ்ணனே வந்து எங்க அப்பாவைக் காப்பாத்தின மாதிரி காப்பாத்திட்டீங்க.”ட்டா... விட்டால் இந்த ஆஸ்பத்திரி ஓரமா கோவிலே கட்டி, கையில் ஒரு புல்லாங்குழலைக் கொடுத்து நிக்க வச்சுடுவீங்க போலிருக்கே! அப்புறம்... இங்க உள்ள அழகழகான நர்சுகள் எல்லாம் கோபிகை மாதிரி என்னையே சுத்த ஆரம்பிச்சுடுவாங்க.’’அவன் இப்படிச் சொல்லவும் புன்னகை படர்ந்த அந்த முகம், பூரிப்பில் நிறைந்தது.“அப்பாவை இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் பார்க்கணும்னு. டாக்டர் சொல்லிட்டார். இனிப் பயம் இல்லைன்னு உறுதி கொடுத்துட்டார். நீங்க ஆபீசிலிருந்து ஓடி வந்திருக்கீங்க. மணி இரண்டாகப் போகுது. சாப்பிடாம இருக்கக் கூடாது. வாங்க, பக்கத்திலேயே ஓட்டல் இருக்கு. சாப்பிடலாம்,’’ என்றான்.“இல்லைங்க. எனக்குப் பசி இல்லை. அப்பாவைப் பார்த்த பிறகுதான் என்னால் எதுவுமே சாப்பிட முடியும்.’’‘‘நீங்க சாப்பிடாம இருக்க முடியும். ஆனா, எனக்குப். பயங்கரப் பசி...’’அவனை அதிர்வாக ஏறிட்டாள்.‘நீங்க சாப்பிடலையா?’’‘‘எப்படிங்க சாப்பிட முடியும்? ஒருவர் உயிருக்குப் போராடும் போது பக்கத்தில் இருக்கிறவனுக்குப் பசி எடுக்குமா? இப்போ பயங்கரப் பசி எனக்கு. ஏன்னா... மனசு நிறைவா இருக்கு. நீங்க என்னோடு சாப்பிடலைன்னா பெண் பாவம் என்னைச் சும்மா விடுமா?’’ அவன் சந்தோஷமாகச் சிரித்தான்.‘‘சாரி... வாங்க!’’ அவனுடைய பேச்சில் இதமாகச் சிரித்த படி அவனுடன் கிளம்பினாள்.இருவரும் பக்கத்திலிருந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர். இரண்டு சாப்பாடு சொல்லிவிட்டு வந்தான், நந்தன். இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.‘‘நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க மிஸ்டர் நந்தன்?’’‘‘இந்த மிஸ்டர், சிஸ்டரெல்லாம் எதுக்கு? அழகா நந்தன்னு கூப்பிடுங்க. நந்துன்னு சுருக்கிக் கூப்பிட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். பதிலுக்கு நானும் உங்களை அமுது என்று கூப்பிடுகிறேன்.”‘‘பசியில் உங்களுக்கு என் பேர் கூட மறந்துடுச்சா? என் பெயர் அமுது இல்லை , தமிழ்!’’ “நான் ஞாபக சக்தியில் யானை மாதிரி. உங்க பேரை மறக்கலை. சரியாத்தான் சொன்னேன்.’’‘‘என்ன... என் பெயர் அமுது என்றுதானே சொன்னீங்க?’’‘‘ஆமா! ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாட்டுக் கேட்ட தில்லையா? பாரதிதாசன் பாடல். அதான், தமிழை அமுதாக்கிச் சொன்னேன்.”அவளை முதலில் புன்னகைக்க வைத்து, பிறகு மலர வைத்தவன், இப்போது பலமாய்ச் சிரிக்கவே வைத்து விட்டான்.‘‘சிரிக்க வைக்கிற மாதிரி நல்லா பேசுறீங்க!’’ அவள் சலங்கையாகக் குலுங்கினாள்.சிலர் திரும்பிப் பார்த்தனர்.“பாருங்க, வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு பெரியவங்க சொன்னது எவ்வளவு உண்மை! உங்க முகத்துல தெரிஞ்ச கவலை யெல்லாம் நீங்க சிரிக்க ஆரம்பிச்சதும் போன இடமே தெரியலை!” என்றவாறே அவளுடைய முகத்தை ரசித்தான்.இலையில் சூடாகச் சோறு போட்டு. சாம்பார் ஊற்றி, வகை வகையாகப் பொரியலை வைத்தான், ஓட்டல் பணியாள்.சாப்பாட்டைப் பிசைந்த நந்தன், ‘‘பாருங்க... நாம உண்மைன்னு நினைக்கிறதெல்லாம் அடுத்த நிமிடமே பொய்யா மாறிடுது!” என்றான்.“எது?” அவனை ஆவலாகப் பார்த்தாள், அவள்.
Disponibile da: 14/02/2024.
Lunghezza di stampa: 98 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Mostra libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Mostra libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Mostra libro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Mostra libro