Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
மாயத் தோற்றங்கள் - cover

மாயத் தோற்றங்கள்

ஆர்.சுமதி

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

கையில் பால் டம்ளருடன் அறைக்குள் நுழைந்தாள் லலிதா.வெங்கட்ராமன் முகத்தில் குழப்பமும் கவலையுமாக இரு கைகளையும் தலையில் கோர்த்து வைத்தபடி படுத்திருந்தார்.கண்கள் மேலே சுழலும் மின்விசிறியோடு சேர்ந்திருந்தது. வழக்கமாகப் படுக்கையில் உறக்கம் வரும் வரை கோவி. மணிசேகரனையோ, கல்கியையோ, சாண்டில்யனையோ படித்தபடியேதான் தூக்கத்திற்குத் தூது விடுவார். வரலாற்று நாவல்கள்தான் அவருக்குப் பிடிக்கும்.இன்று ‘கடல் புறா’ படிக்கப்படாமல் மூடிக் கிடந்தது.துணுக்குற்றவளாக அவரருகே வந்தாள்.“இந்தாங்கோ... பால் சாப்பிடுங்கோ!” என்றாள்.“அப்படி வை!” குரல் மட்டும் வந்தது. கண்கள் அவளைப் பார்க்கவில்லை.ஆச்சரியமாக இருந்தது. அவருக்குப் பால் கொஞ்சம் கூட சூடு குறையக் கூடாது. உடனே குடித்து விடுவார். இன்றோ ஆறட்டும் என்பதைப் போல் வைக்கச் சொல்கிறார்.“ஏன்னா... என்னாச்சு? என்னவோ போல இருக்கேள்?” என்றபடி அருகே அமர்ந்தாள்.“ப்ச்! தலைவலி...”“தைலம் தேய்ச்சு விடட்டா?”“வேண்டாம். சரியாப் போயிடும்.”“முகமே சரியில்லையே... ஏன்னா... ஆபீஸ்ல ஏதாச்சும் பிரச்சனையா?”ஆபீஸ்ல ஒரு பிரச்சனையும் இல்லை. வீட்டுலதான் பிரச்சனை.”“வீட்டுல பிரச்சனையா? எனக்குத் தெரியாம வீட்டுல என்ன பிரச்சனை வந்துடப் போகுது?”“உன் பொண்ணை நினைச்சுத்தான் எனக்குக் கவலையா இருக்கு...”இப்பொழுது தன் ஐம்பது வயது அழகை மிகைப்படுத்திக் காட்டுவதைப் போல் சிரித்தாள் லலிதா.“அவளுக்கு என்னன்னா குறைச்சல்? நன்னாப் படிச்சிருக்கா! கைநிறையச் சம்பாதிக்கிறா. பார்க்க என்னை அப்படியே உரிச்சு வச்சிருக்கா. மகாலட்சுமியாட்டம் ஜொலிக்கறா. ஜாதகத்தைக் கையில் எடுத்தா வர்றவன் கொத்திக்கிட்டு போயிடுவான்...”பொங்கிப் பூரித்து முகமெங்கும் பரவிய சிரிப்பு... மனைவியின் முகத்தில் இன்னும் சில நிமிடங்களில் மறையப் போவதை நினைத்து வருத்தப்பட்டவாறே சொன்னார் வெங்கட்ராமன்.“அவ ஜாதகத்தை வெளியே எடுக்கவேண்டிய அவசியமே இல்லாமல் பண்ணிட்டாடி.”முகம் மாறினாள் லலிதா.“என்ன சொல்றேள்?”எழுந்து அமர்ந்தார். பேச முயன்றார். முடியவில்லை என்பதைப் போல் செருமினார்.மேசை மீதிருந்த பாலை எடுத்து மெல்லப் பருகினார். அவர் பருகி முடிக்கும் வரை பொறுக்க முடியாதவளைப் போல் லலிதா பயம் கலந்த பார்வையை அவர் மீது பதித்திருந்தாள்.காலி டம்ளரை வைத்தவர் விஷயத்தைச் சொல்ல ஏதோ கொஞ்சம் தெம்பு வந்தவரைப் போல் மனைவியைப் பார்த்தார்.“லலிதா... நந்தினி காதலிக்கிறாளாம்...”இன்னும் சில நிமிடங்களில் பூகம்பம் உண்டாகும் என்று வானொலியில் செய்தி கேட்டதைப் போல் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.“கடவுளே... என்ன சொல்றேள்?உன் பொண்ணு காதல் பண்றான்னு சொன்னேன்.”“என்ன பேசறேள்? என்னமோ கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்றாள்னு சொல்ற மாதிரியில்லே சொல்றேள்?”“இப்பவெல்லாம் காதலும் கம்ப்யூட்டர் கோர்ஸ் மாதிரிதான்டி. மாடர்ன் உலகத்துக்கு கம்ப்யூட்டர் அறிவு இல்லாம எதுவும் பண்ண முடியாது. காதலும் இப்ப அப்படி ஆகிப்போச்சு...”“யார் சொன்னா? பொறாமை புடிச்ச எவனாவது சொன்னான்னு நம்பிட்டேளா? நம்ம பொண்ணு அப்படியெல்லாம் பண்ணமாட்டா!”அவளுடைய நம்பிக்கையைப் பார்த்துச் சிரித்தார். “யாரும் சொல்லலைடி!”“பின்னே... நீங்க கண்ணால பார்த்தேளா? இந்தக் காலத்துல கூடப் படிக்கிற பசங்க கூட... கூட வேலை பார்க்கற பசங்களோட பழகுறது சகஜம்தானே... உங்க பொண்ணை யார் கூடவாவது ஒண்ணாப் பார்த்துட்டு உடனே முடிவு பண்ணிட்டேளா? அவகிட்ட எதையாவது இப்படி ஏடாகூடமா கேட்டு வைக்காதீங்க. நம்மைப் பழம் பஞ்சாங்கம்னு நினைச்சுடப் போறா...”வாய் விட்டே சிரித்து விட்டார்
Disponibile da: 14/02/2024.
Lunghezza di stampa: 31 pagine.

Altri libri che potrebbero interessarti

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Mostra libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Mostra libro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Mostra libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Mostra libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Mostra libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro