Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
காதல் மலரும் காத்திரு - cover

காதல் மலரும் காத்திரு

ஆர்.சுமதி

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

மனதை மயக்கும் மாலை நேரம்.அந்த அழகை மேலும் அழகூட்டுவதைப் போல் ஆதிரை அலையடிக்கும் கரையோரம் கால் பதித்து நடந்து கொண்டிருந்தாள்.அவளுடைய தோளை உரசியபடி நடந்து கொண்டிருந்த ஸ்டீபன் அவள் அழகை ரசித்த வண்ணம் நடந்தாலும்... வழக்கமாகப் பொலிவு பொங்கும் அவள் முகத்தில் ஒருவித அமைதியும் உற்சாகமின்மையும் தங்கியிருப்பதைக் கண்டான்.சற்றுத் தூரம் நடந்து விட்டு இருவரும் மணற்பரப்பில் அமர்ந்தனர்.“ஆதிரை... என்னாச்சு உனக்கு?” - அவளுடைய அமைதிக்கும் குழப்பத்திற்கும் விளக்கம் கேட்டான் ஸ்டீபன்.“ஒண்ணுமில்லை. நல்லாத்தானே இருக்கேன்...” - சிரிக்க முயன்றாள்.“வழக்கமான - கலகலப்பையே காணோம்? காதலிச்சவன் ஏமாத்திக் கைவிட்ட மாதிரி சோகமா யிருக்கே...” சிரித்தபடியே சீண்டினான்.“கடைசியில் நிலைமை அப்படித்தான் ஆகிடும் போலிருக்கு...” - தளர்வாகச் சொன்னாள்.“என் மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் ஏமாத்திடுவேனோன்னு பயப்படறியா?”“நீங்க இல்ல... நான்தான்.”“அடிப்பாவி! என்னை விட ஸ்மார்ட்டா எவனாவது உன்கிட்ட ‘ஐ லவ் யூ’ன்னு சொன்னானா? உடனே நீ பல்டி அடிச்சுட்டியா? ஆண் பாவம் பொல்லாதது. நான் சாபம் விட்டேன்னா... நீ இந்த அழகையெல்லாம் இழந்து அவ்வைக் கிழவி மாதிரி ஆயிடுவே.”ஆதிரை வாய் விட்டுக் கலகலவெனச் சிரித்தாள்“சொல்லு... யார் அந்த ஆணழகன்?”“சொன்னா அவனைக் கண்டுபிடிச்சு கண்டந்துண்டமா வெட்டிப் போடப் போறீங்களா?”“வெட்டிப் போடுறதா? அவன் கால்ல விழுந்து தயவு பண்ணி இந்தப் பிசாசைக் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு விடுதலை கொடுன்னு கெஞ்சுவேன்...”“என்னமோ இப்பத்தான் சாபம் தந்து கிழவியாக்கப் போறதாச் சொன்னீங்க?”“அதுக்குத் தேவையே இல்லை. ஏன்னா நீ இப்பவே பார்க்க கிழவி மாதிரிதான் இருக்கே...”“உங்களை...” - அவனைச் செல்லமாக மார்பில் குத்தினாள். பின் சொன்னாள்.“எங்கப்பா எனக்குக் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணிட்டார்.”“வெரிகுட்! இப்பத்தான் ஒரு நல்ல தகப்பன்கறதை நிரூபிச்சிருக்கார். நீ என்னைப் பற்றிச் சொல்லிட்டியா? அதனாலதான் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணியிருக்காரா?”“உங்களைப் பற்றிச் சொல்றதா? ஐய்யோ...”“ஏன்? நான் என்ன நாலு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கா போயிட்டு வந்திருக்கேன். என்னைப் பற்றிச் சொல்லப் பயப்படுறே?”“எங்கப்பா கொலைகாரனுக்குக் கூட பொண்ணு கொடுப்பார் போலிருக்கு. வேற ஜாதிக்காரனுக்குக் கொடுக்கமாட்டார். அதிலும் நீங்க மதமே வேற.”“எங்க உங்கப்பா இந்தக் காலத்துல போய் இப்படியிருக்கார்...?”“எந்தக் காலத்திலேயும் இப்படிப்பட்டவங்க இருக்கத்தான் செய்வாங்க. எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி ஒரு தரகர்கிட்ட சொல்லியிருந்தார். அவரும் ஒரு ஜாதகத்தைக் கொடுத்திருந்தார். மாப்பிள்ளை அழகு. அதிகச் சம்பளம்.”“ஏய்... என்ன மட்டம் தட்டறியா?”அட... உண்மையைச் சொன்னேன். அந்தப் பையன் வேற ஜாதி. தரகர் ஏதோ அவசரத்துல ஜாதகத்தைக் கொடுத்துட்டார். அப்புறம்தான் விஷயத்தைச் சொல்லியிருக்கார். ஆனா அப்பா உடனே அந்த ஜாதகத்தைத் திருப்பி அனுப்பிட்டார்... அதான் பயமாயிருக்கு...” என நடந்ததைச் சொல்லி முடித்தாள்.“அதான் என்னை ஏமாத்தப் போறதாச் சொன்னியா? அப்படின்னா உங்க அப்பா பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை அலைய விடப் போறியா?”“ச்சே! சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீயின்றி நானில்லை. உன் நினைவே ஒரு சங்கீதம். நெஞ்சம் மறப்பதில்லை. உன் நினைவை இழப்பதில்லை.”“சகிக்கலை. வசனம் பேசறதை நிறுத்து. வாழ்க்கையைப் பற்றிப் பேசு.”“உங்கப்பா நம்ம காதலை ஏத்துக்கலைன்னா என்ன பண்றது?”“விடு... ஜூட்தான்.”“நீ ரொம்பத் துணிச்சலா இருக்கே...”“வேற வழி இல்லை. இல்லாட்டி நம்மைக் கோழையாக்கிடுவாங்க. ஒண்ணு நம்மைச் சாகடிச்சுடுவாங்க. இல்லாட்டி அவங்க செத்துப் போறதாச் சொல்லி மிரட்டி நம்மைப் பணிய வைச்சுடுவாங்க. நம்ம காதலைச் சொல்லி நாமே நமக்குக் குழி தோண்டிக்க வேண்டாம்...நம்ம ஃப்ரெண்ட்ஸுங்களை வச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போம். மாலையும் கழுத்துமா போய் அவங்க கால்ல விழுந்தா ஒண்ணும் பண்ண முடியாது.”“அப்ப மட்டும் ஒத்துப்பாங்கன்னு என்ன நிச்சயம்?”“அப்போதைக்கு ஏத்துக்கலைன்னாலும் காலப் போக்குல மனசு மாறி ஒத்துப்பாங்க. அதிலும் நான் ஒரே பொண்ணு. பாசம் விடாது. தேடிக்கிட்டு வந்துடுவாங்க.”“ரொம்பத் தெளிவாத்தான் இருக்கே. ஆனா... என்னால அப்படி இருக்க முடியாது.ரிஜிஸ்டர் மேரேஜல்லாம் பண்ணிக்க முடியாது.”
Disponibile da: 14/02/2024.
Lunghezza di stampa: 131 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Mostra libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Mostra libro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Mostra libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Mostra libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Mostra libro